Saturday 10 November 2012

Lawyers Line November 2012 Print Edition

Lawyers Line - November 2012 Issue Released, Check with the below link...
www.lawyersline.net

Friday 26 October 2012

SH கப்பாடியா, ஒரு சகாப்தம்


இந்தியாவின் மிகப் பெரிய CJI அல்லது தவறவிடப்பட்ட வாய்ப்பு? எப்படி நீங்கள் இந்த சகாப்தத்தை நினைவில் வைத்துக் கொள்வீர்கள்.

இந்தியாவின் தலைமை நீதிபதியாக ஓய்வு  பெற்றபின் சரோஷ் ஹோமி கப்பாடியா. தனது சூழ்நிலைகளாலே விளக்கப்பட்டதும் சூழப்பட்டதுமான சகாப்தத்தை விட்டுச் சென்றார்.


உதாரணமாக, கப்பாடியாவிற்கு முன் இருந்த K.G.பாலகிருஷ்ணன் மூன்று வருடத்திற்கும் மேலாக CJI ஆசனத்தில் இருந்துகுறிப்பிடத்தக்க விமர்சனங் களுக்கும் தர்க்கங்களுக்கும் உள் ளாகி, மத்திய புலனாய்வுத் துறையின் (CBI) விசாரணைக்கும் உள்ளானார். அதற்கு மாறாக, கப்பா டியா அனைத்து விதத்திலும் குற்ற மற்றவராக இருந்தார்.

ஒரு மூதரிந்த வழக்கறிஞர், "கப்பாடியாவை பற்றி கூறும்  போது காரியங்கள் மிகவும் மோசமாக இருந்த போதும் கூட அவரின் மதிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி இருந்தது" என்றார்.

கப்பாடியாவின் மதிப்பைப் போலவே அவரது தனிப்பட்ட வரலாறும் இந்திய மக்களுக்கென்று எழுதப்பட்ட ஒரு சகாப்தமாகவே இருந்தது.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு மிகவும் ஏழ்மையான பார்சிக் குடும்பத்தில் பிறந்த இவர், பின்பு பம்பாயில் ஒரு நிறுவனத்தில் பியூன் தகுதியுடைய வேலையை பார்த்தார். அவர் சட்டத்தை விரும்பிக் கற்றுக் கொண்டார். மதிய வேளைகளில் வறுத்த கட லையை கொரித்துக் கொண்டே பம்பாய் உயர்நீதிமன்றத்தின் மும்பை ஃபுளோரா, ஃபுவுன்டெயின் அருகே அமர்ந்திருப்பார். கொஞ்சம் கொஞ்சமாய் மனித தன்மையற்ற கடின வேலைகள் மூலம், கடந்த இரண்டு வருடங் களில் இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்களுள் ஒருவராக உயர்ந்தார். இந்த சம்பவம் கடந்த மாதத்தின், ஃபோர்ப்ஸ் நாளிதழில் அழகாகச் சொல்லப்பட்டு உள்ளது.

ஓய்விற்கு பிறகு, கப் பாடியா, மற்ற முன்னாள் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமிக் கப்பட்டதைப் போல எந்த அரசாங்க பதவியிலும் அமர்த்தப்பட எத்தனிக்கவில்லை. என சில உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். அதற்கு பதிலாக, அவர் மும்பைக்குத் திரும்ப வந்து தனது பணிகளை மத்தியஸ்தராக தொடரப் போவதாக பலரும் நம்புகின் றனர். இது மிகவும் நல்ல ஒரு தொழில் முறை, முக்கியமாக ஓய்வு பெற்ற நீதிபதி களுக்கு மேலும் இவரைப் போன்ற திற மையினைக் கொண்டவர்களுக்கும் இது பொருத்தமானதாகும்.

கப்பாடியாவின் பதவி உயர்வின் நேரம் மிகவும் சரியானதாகும். அது இந்தியாவின் தாராள மயமாக்களுக்கு பிறகான மாற்றத்தின் காலமான அறிவுடைமை மற்றும் உரிமத்தின் சட்டத்தில் இருந்து மிகவும் அதிகமான மேற்கத்திய ஆளுமையுள்ள பொருளாதாரத்திற்கு மாறிய காலமாகும். இது போன்ற முறையில், சட்டத்தின் ஆளுமை, நீதிக்கான லாபத்தின் தன்மையில் இருந்து, பொருளாதார வளர்ச்சியின் கட்டுப்படுத்தும் விசையானது. இதற்கு உச்ச நீதிமன்றமும் அதன் நீதிபதிகளுமே தலைவர்களாய இருப்பார்கள்.

சில வழக்குகளான 2நி வழக்குகளின் போதும், வோடபோன் மற்றும் சஹாரா போன்ற வழக்குகளின் போதும், கப்பாடியாவின் நாட்களில் இருந்த உச்சநீதிமன்றம், அரசாங்கம் மற்றும் இந்திய நிறுவனங்கள் அனைத்திற்கும், என்ன இழப்புகள் ஏற்பட்டாலும், கேள்விக்குரிய தரப்பினர் யாராக இருந்தாலும்  அல்லது எதிர்காலத்தில் எழுதக்கூடிய மிரட்டல்கள், குழப்பங்கள் என எதைக் குறித்தும் கவலைப்படாமல் உச்சநீதிமன்றம் அனைத்து சட்டதிட்டங்களையும் முன் வைத்தது.

கடந்த வாரம் நடந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் பெருவணிக சூழ்நிலை என்னும் கருத்தரங்கில், அவருக்கு அடுத்து பதவியேற்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் முன்னிலையில் பல காரியங்களை உறுதி செய்தார்.

கப்பாடியா சட்டங்களின் விதிகள் மட்டுமே, குறைந்தபட்ச நியாயத்தின் அளவையும், பொருளாதார வளர்ச்சியின் ஒரே பெரிய உந்துவிசையாக முடியும்.

 இந்து நாளிதழ் படி
அரசாங்கம் முந்தைய நாளில், பெரு அங்காடிகளிலும் மற்றும் வான்வழி பயண துறையின் பொருளாதார முன்னேற்றங்களிலும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை தாராளமயமாக்குதலை அறிவித்திருந்தது. இது பாதிப்புகளையும், பேரழிவுகளையும் தவிர்ப்பதோடு, முதலீட்டையும், வேலை வாய்ப்பின் வளர்ச்சிகளையும் ஊக்கப்படுத்தும். கப்பாடியா இதனை பெரிதும் பாராட்டினார்.

இது நீதிமன்றத்திற்கு வெளியே கப்பாடியாவின் சிந்தனைக்கப்பால் உண்டான அரிய பொது பேச்சாகும். அதுவும் நீதிபதிப் பதவியைப் பற்றி மிகவும் ஊடகங்களில் பேச கூச்சப்படும் சியிமி சொன்னது மிகவும் ஆச்சரிய மாக இருந்தது. (ஆனால் பொதுவாக அவர் தனக்குத் தானே ஊடகங்களிடம் பேட்டி கொடுக்க் கூடாது என்று விதித்துக் கொண்ட கட்டுப்பாடு. ஊடகங் களை சந்திக்க கூச்சம் என தவறாக விளக்கப்
பட்டது.) அவருடைய அபிப்ராயங்களைக் கேட்டு வந்த மின்னஞ்சல்களுக்கு அவரது அலுவலகத்தினர் பதிலளிக்கவில்லை.

ஆனால், புதிய உச்சநீதிமன்றத்திற்கான கோட்பாடு கப்பாடியாவின் நீதிமன்றத்தில் தெளிவாகத் தெரிந்தது.
2012, செப்ட்ம்பர் 6 அன்று, கப்பாடியாவினால் தலைமை ஏற்று நடத்தப்பட்ட, மத்தியஸ்த சட்டத்தின் மீதான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட சட்டங்கள் பெஞ்சின் முடிவு, வெகு காலமாய் அந்நிய முதலீட்டாளர்கள் பயப்பட்ட பாட்டியா சர்வதேச வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அந்நிய முதலீட்டாளர்களும் நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களுடன் மத்தியஸ்த முறையில் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள பயப்பட்டனர். ஏனெனில் இந்திய நீதிமன்றங்கள் அவர்களது தலையீட்டினால் மத்தியஸ்தத்தை வெகுநாள் ந¦ட்டித்து விடுவார்கள்.

அவரது வோடஃபோனின் வருமான வரி தீர்ப்பில், கப்பாடியா அவரது கோட்பாட்டை இன்னும் தெளிவாகத் தெரிவித்தார். நேரடி அந்நிய முதலீடு அதிக பலமுள்ள நிர்வாகம் அமைப்பினைக் கொண்ட இடத்தில் போய் செல்கிறது. இது சட்டம் இயற்றுதலையும், எவ்வளவு சிறப்பாக சட்டமுறை செயல்படுகின்றது என்பதையும் உள்ளடக்கியதாகும்.

கப்பாடியாவின் நேரம் மட்டுமல்ல, அவரது ஆர்வங்களுக்கேற்றாற் போல அவரது ராசி அமைந்திருந்தது என்பதற்கு இவ்வழக்கு இன்னொரு உதாரணமாகும். கப்பாடியாவின் வரி சட்ட நிபுணத்துவத்திற்கு ஈடாக இந்திய நடுவர் குழுவில் எவரும் இல்லை எனப் பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகின்றது.

அரசாங்க சட்டத்தின் தற்போதைய மாற்றங்களை சகிக்க இயலாமல், தீர்ப்பை மாற்றக் கோரி தொடரப்பட்ட வோடபோனின் வழக்கில் மில்லியன் கணக்கில் அமெரிக்க டாலர்கள் ஆபத்தில் இருந்தன. அவை இன்னொரு அந்நிய நிறுவனத்திடம் இழுக்கப்படலாம். அல்லது அரசாங்க கஜானாவினுள் வந்து சேரலாம். மற்றும் வெகு சீக்கிரமே இவ்வழக்கு, சமீப காலங்களிலேயே நடந்த இந்தியாவின் மிக முக்கியமான அந்நிய முதலீடு தொடர்பான பிரச்சினை ஆனது. ஆனால், இப்போது பிரமிக்கும் பல குடிமக்களுக்கு, இம்மாதிரி வழக்கில் ஒரு மனிதரால் தீர்ப்பு சொல்ல இயலுமா என்பதில் சந்தேகம் இருந்திருந்ததில் ஆச்சரியமில்லை.

M.L ஷர்மா என்கிற ஒரு வழக்கறிஞர், மிகவும் கடினமான ஒரு தொடர்பை வழக்கில் கொண்டு வர நினைத்தார். அது கப்பாடியாவுக்கும் அவரது மகனுக்கும், ஏனெனில் அவரது மகன் எர்னஸ்ட்&யங் என்னும் நிறுவனத்தில், அந்நிறுவனத்தின் வேறு துறை வோடபோன் ஹாட்சின்சன் ஒப்பந்தத்தில் பணி புரிந்த ஒரு வருடம் கழித்து அவர் வேலைக்கு சேர்ந்தார். இதுப் போன்ற ஒரு ஆதாரமற்ற கோரிக்கையினால் ஷர்மா வேறு இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதி களால் ரூ.50,000/ அபராதமாக விதிக்கப்பட்டார்.

ஆனால், மறுபடியும் கப்பாடியா நியாயமானவர் அல்ல என நிரூபிக்க இரண்டாவது முறை முயற்சித்தார். இன்னொரு வழக்கில் அதை முயன்றார். ஏனெனில் கப்பாடியாவின் மருமகன் டாடா குழும நிறுவனத்துடன் பணிபுரிந்தார். என்னதான் ஆதாரமற்றதாய் இருந்தாலும் வேறு சில நீதிபதிகளாய் இருந்தால் இது போன்ற தாக்குதல்களில் ஆடிப் போய் இருப்பார்கள். ஆனால் கப்பாடியா அப்படிப்பட்டவரல்ல.

நீதித் துறையில் அவர் பல வரி தீர்ப்புகளுக்காக நினைவில் வைக்கப்படலாம். ஆனால், பொருளா தாரத்தை தவிர, கப்பாடியா, கல்வி சட்டத்திற்கான சட்டத்தின் மாறுதலின் உரிமை என்னும் வழக் கிலும் அவர் தீர்ப்பை அளித்தார். முழுவதும் சாதகமாக அல்ல, இதற்கான நீதிபதிகள் குழு நீதிமன்ற
வழக்குகளில் ஊடகங்கள் அறிவிப்பைக் கொடுப் பதைக் குறித்த வழக்கின் போது, அவர்கள் பத்திரிகை
யாளர்களிடம் இருந்து மட்டுமல்ல பல வழக்கறி ஞர்களிடம் இருந்தும் கேள்வி தாக்குதலை எதிர் கொண்டனர்.

ஏனெனில் சட்டத்தை தீர்ப்பது என்பது இந்திய தலைமை நீதிபதியின் வேலையில் பாதி மட்டுமே, அவர் இந்தியாவின் மிக அதிகமாக பரந்து விரிந்துள்ள நீதிமன்ற முறைகளில் இருந்து வரும் 3 கோடிக்கும் அதிகமான நிலுவையில் உள்ள வழக்குகளையும் அதனுடன் நிர்வாகம் மற்றும் வரலாற்று செயலற்ற தன்மைகளையும் நிர்வாகிக்க வேண்டிய பெரும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய சட்டப்பூர்வமான பணிகள்:

பாரதி ரியல்டி ஹோல்டிங்க்ஸ் லிமிடெட்: உதவி மேலாளர் & சட்டப்பூர்வமானது & குர்கவுன் (2 - 3 வருடங்கள் PQE) ரியல் எஸ்டேட் சட்டங்கள்.

ஃபிளேரம் டெக்னாலஜிஸ் : உதவி மேலாளர் & சட்டப்பூர்வமானது (3 - 5 வருடங்கள் PQE  ரியல் எஸ்டேட்டில் மிறி வழக்கு, அமைப்பு, ஒப்பந்தத்தை சரிபார்த்தல், போன்றவை.

ஃபிளாட் வோர்ல்ட் சல்யூஷன்ஸ் & சட்டப்பூர்வ அதிகாரி & பெங்களூர் (2.5 வருடங்கள் PQE)

இணையதள ஜனநாயக திட்டம் : திட்ட அதிகாரி & இளையதள ஜனநாயக திட்டம் & டெல்லி / மும்பை 3 - 5 வருடங்கள் றினிணி இந்திய பார் கவுன்சில்: இந்திய பார் கவுன்சிலில் உள்ள காலி பணியிடங்கள் புதுடெல்லி.

MDP & பார்ட்னர்ஸ் (மும்பை & உதவி அலுவலர் & ரழக்கு, மத்தியஸ்தம், பெரு வணிகச் சட்டங்கள் (2 - 3 வருடங்கள் PQE)

சிர் அமித் லா சேம்பர்ஸ் & ஜெய்ப்பூரில் தேவைப் படும் சட்ட உதவியாளர்கள் சட்ட நிறுவனம் அடிப்படையிலான வழக்கு.

நிலுவையில் இருப்பவை குறித்த கணக்கின்படி, கப்பாடியா வெற்றி பெறவில்லை. 2010, ஏப்ரல் மாதத்தில் அவர் பதவியேற்ற போது உச்சநீதிமன்றத்தில் மொத்தமாக 55,018 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இது ஆகஸ்ட் 2012 வரை 16 % அதிகரித்தது. எனவே, 63,749 வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவற்றுள் 42, 583 வழக்குகள் ஒரு வருடத்திற்கும் மேலாக புத்தகத்தில் இருந்தன. கப்பாடியாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வராத கீழ் நீதிமன்றங்களில் கூட வழக்கின் எண்ணிக்கைகள் அதிகரித்தன.

ஒரு முதிர்ந்த வழக்கறிஞர், இதனை முற்றிலுமாக வெளியேறும் ஒரு சியிமி யின் மீது சுமத்துவது நியாயமற்றதாகும் எனக் கோரினார். எனினும், இது எந்த தலைமை நீதிபதியினாலும் தீர்க்க இயலாது, எனக்கூறினார். ஏனெனில் இந்த முறையிலேயே தவறு இருக்கின்றது. எந்தவொரு வழக்கும் விஷேசித்த விடுப்பு மனுவின் (ஷிறிலி) மூலம் உச்சநீதிமன்றத்தை அடையலாம். மேலும் அவற்றுக்கு என எந்தவொரு வழக்கு நாளும் தீர்மானிக்கப்படவில்லை. கீழ் நீதிமன்றங்கள் நடைமுறையில் நாளுக்கு நாள் உயர் நீதிமன்றங்களில் மேற்பார்வைக் கீழ் வருகிறார்கள்.

கப்பாடியா மக்களுக்குள்ளும் காரியங்களுக்குள்ளும் சர்வ சாதாரணமாக பயத்தை புகுத்தி விடுவார். ஆனால், இது மிகப் பெரிய நாடு மற்றும் அநேக நீதிமன்றங்கள் இருக்கின்றன. இந்திய தலைமை நீதிபதி உண்மையில் எவ்வளவு தான் செய்ய முடியும்? என ஒரு வழக்கறிஞர் கேட்டார்.

கப்பாடியா உண்மையில் தனது எல்லைக்குள் ஒழுக்கத்தை வலியுறுத்தினார். இதனை வழக்கறிஞர் தனது நீதிமன்றத்திற்குள் தங்களது திட்டமிட்ட வரிசையில் இருந்து தவறி வேறு வழக்குகளுக்குத் தாவுவதை தடை செய்தார்.

கப்பாடியாவின் காலத்தின் போது, உச்சநீதிமன்ற கஜானாவில் ஊழல் குறிப்பிடும்படியாகக் குறைந்திருந்தது. பல வழக்கறிஞரர்களின் கூற்றுப்படி, Ôமுன்னர் யாராவது ஒரு குறிப்பிட்ட நீதிபதிகள் குழுவின் முன்பு முயற்சித்து காரியங்களை முடிக்க லாம். அல்லது கோப்புகள் தொலைந்து போகலாம். அல்லது காரியங்கள் தாமதமாகலாம் என்று ஒருவர் கூறினார்.

அடுத்த நாளுக்கான வழக்குகளை நன்கு ஆராய்ந்து, அதன் காரியங்களில் கவனம் செலுத்து வதன் மூலமும், நடத்தை மற்றும் கடின உழைப்பைத் துணையாகக் கொண்டு கப்பாடியா இவற்றை சரி செய்தார். கப்பாடியாவின் சிறந்த நிர்வாகத் திறமைக் குறித்துச் சொல்லுகையில், ஷிசிகிளிஸிகி &வின் தலைவர் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார் ÔÔகனம் பொருந்திய நீதிபதி அவர்களுக்கு எவ்வாறு, ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கான விருந்து உபசரிப்பு முடிந்தவுடன் தேநீர் அருந்தக்கூட நேரம் இருக்கவில்லை என்பதை உறுப்பினர்கள் மிகுந்த வருத்தத்துடனும், கவனித்து அதை மரியாதையுடன் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றோம் மரியாதையுடன் நாங்கள் கருதுவது என்னவெனில் இதுப் போன்ற நிகழ்வுகளின் போது சுதந்திரமாகக் கலந்துரையாடவும், ஆலோசனைகளை நிறுவனத்தின் நலனுக்காக பகிர்ந்து கொள்ளவும் கிடைக்கும் நேரத்தை தவிர்க்க வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார்.

பல வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, முதிர்ந்த நீதிபதிகளின் குழு மே மாதத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி குழுவிற்கு வரும் புதிய நியமனங்களில் எதையுமே ஒத்துக் கொள்ளத் தவறியுள்ளனர். தற்போது திரு.தீபக் வர்மா என்னும் நீதிபதியின் ஓய்வோடு, கப்பாடியாவின் ஓய்விற்கு பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக குறைந¢துவிடும். இது அனுமதிக்கப்பட்ட 31&விட 6 குறைவாகும். 2011&ன் ஆரம்பத்தில் 4 பேர் தான் குறைவாக இருந்தனர்.

871 நாட்கள் அல்லது இரண்டு வருடங்கள் மற்றும் நான்கு மாதங்கள் என, கப்பாடியா இந்தியாவின் தற்போதைய வரலாற்றில் மிக நீளமான பதவி காலத்தை, இந்தியாவின் நீதித்துறை தலைவராகப் பெற்று இருந்து வந்தார். 27 வருடங்களில் மூன்று பேர் மட்டுமே இவ்வளவு நாட்கள் பதவி வகித் துள்ளனர். எனினும், நீதித்துறை நியமனங்களில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் ஓய்வு முறையின் காரணாக, கப்பாடியாவிற்கு அடுத்து பதவியேற்ற நீதிபதிகள் கபீர் மற்றும்  றி.சதாசிவம் ஆகியோர் நாட்டின் நீதித்துறையை சில காலங்களுக்கு மட்டுமே பதவி வகிக்க திட்டமிடப்பட்டிருந்தனர். இது தங்களுக்கென்று ஒரு தாக்கத்தை ஏற்படுத்தப்போதுமான கால அளவு கிடையாது.

ஒரு வழக்கறிஞர் கூறினார், டெல்லி உயர்நீதிமன்றம் செய்ததை போல கப்பாடியா உச்சநீதிமன்றத்தை கணினிமயமாக்கி முழுவதுமாக மின்னியல் நீதிமன்றத்தை உருவாக்கியிருக்க வேண்டும். எனினும் மற்றொரு வழக்கறிஞர் கூறுகையில், இதற்கு குறைந்தது பத்தாண்டுகளாவது தேவைப்படும். ஏனெனில் பழைய தலைமுறையின் நீதிபதிகள் நீதிமன்றத்தின் தகவல் தொழில்நுட்பத்தை உபயோகிப்பதில் திருப்தி அடைந்திருக்க மாட்டார்கள். கபீர் ஆனால் இருவரின் கூற்றையும் தவறு என நிரூபிக்கலாம்.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் குறுகிய காலங்கள், நிறுவனத்திற்குட்பட்ட பிரச்சினையாகும். மற்றும் இது ஓய்வு பெறும் வயதை அதிகரித்து தான் தீர்வு செய்ய முடியும். ஆனால், அதிலும் கப்பாடியாவை விட நிர்வாகத் திறன் குறைந்தவராக இருந்தால், அவரால், குழப்பம் மிகுந்த இத்துரையை நீண்ட காலம் நடத்த இயலுமா என்னும் ஆபத்தும் உள்ளது.

சந்தேகமேயில்லாமல், கப்பாடியா பெரும் மதிப்பு வாய்ந்தவராகத் திகழ்கிறார். மேலும் முதிர்ந்த வழக்கறிஞர்களும் மற்றும் முன்னாள் நண்பர்களும் தற்போது பிரசுரிக்கப்பட்ட செய்திகளில் அவர் மேல் வேகமாக அதிக அளவில் பாராட்டுக்களைப் பொழிந்துள்ளனர்.

ஆனால், இந்தியாவின் பெரும் CJI க்களின் அரங்கில் அவர் நினைவுக்கூறப்படுவாரா? அதற்கு வழியே இல்லை என மிகவும் திறன் மிக்க CJI வின் எடுத்துக்காட்டாக எம்.என்.வெங்கடாசலையாவை கூறினார் ஒரு முதிர்ந்த வழக்கறிஞர்.

ஆனால் சரியான நேரத்தில், சரியான பதவியில், சரியான மனிதராக கப்பாடியா இருந்தார் என்பதை மறுப்பவர்கள் வெகுசிலரே.

கணவர்களுக்கு எதிரான கொடுமைகள்


இந்தியாவில் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான பந்தமாக, சமுதாயத்தில் சமூக அந்தஸ்தை பெறவும் ஒரு கருவியாகப் பார்க்கப்படுகின்றது. மற்றுமல்லாது திருமணம் என்பது இனவிருத்திக்கும், மற்றும் குழந¢தை பெறவுமே செய்யப்படுகின்றது. வெஸ்ட்மார்க்கின் கருத்துப்படி, திருமணம் என்பது ஒரு நிறுவனமாகும். திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் போலவே, ஒவ்வொரு நாளும் திருமண முறிவுகளும், கணவன் அல்லது மனைவியின் தவறினால் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. என்னதான் இ.பி.கோ 498&கி மற்றும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மனைவியால் வழக்குகள் பதிவு செயல்பட்டாலும், பாதுகாப்பு மற்றும் விவாகரத்திற்காக பதிவு செய்யப்படும் புகார்களில் அனைத்துமே உண்மையான முறையில் பதிவு செய்யப்படுவதில்லை. கல்வி, வேலை வாய்ப்பு கள், பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூக நடத்தை என்று அனைத்திலும் கிடைத்த சுதந்திரம் பெண்களின் அந்தஸ்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம உரிமையின் தராசு முள் பெண் களுக்கு சாதகமாக சாய்ந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

கொடுமை என்பது மனித தன்மையற்ற செயலாகும். மற்றும் இது மனரீதியான கஷ்டங்களை ஏற்படுத்தி, மற்றவருடைய ஆரோக்கியம் மற்றும் வாழ்வை பாதிப்படைய செய்வதாகும். கொடுமை என்பது உடலியல் அல்லது மனரீதியான செயலாகவும், கணவன் அல்லது மனைவியினால் செய்யப்படுவதாக இருக்கலாம். என்னதான் காலங்காலமாக, பெண்கள், கணவர் மற்றும் அவரது உறவினர்களால் கொடுமைகளுக்கும் வன்முறை களுக்கும் ஆளாகியிருந்தாலும், இப்போது இவ்வாறு சொல்வது பொருத்தமானதாகாது.

ஏனெனில் மனைவியினால் கொடுமைகளுக்கும், வன்முறைகளுக்கும் உள்ளாகும் கணவர்களின் வழக்குகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. கொடுமை என்பது விவாகரத்தை பெறுவதற்கு மிக முக்கியமானக் காரணமாகும் என 1935ன் இந்து திருமணச் சட்டம் 13(1) (i-a)  பிரிவின் கீழ் விளக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழக்கை பதிவு செய்யும் தரப்பினர் கணவன் மற்றும் மனைவி இணைந்து வாழ்வது கூடாத காரியம் என்பதை ந¤ரூபிக்க வேண்டும்.

நமது சட்டப்பிரிவின் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ள பெண்களுக்கு பாதுகாப்பிற்காக பொருந்தும். அநேக சட்டங்கள் உள்ளன. இந்த சட்டங்களின் சார்பு தன்மை என்னவெனில் இந்தியாவில் உள்ள மற்ற எல்லா சட்டங்களையும் விட இதில் குற்றச்சாட்டப்பட்டவரே தனது குற்றமின்மையை நிரூபிக்க வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட நபர் மனைவியினால் புகார் செய்யப்பட்ட உடனே கணவரும் அவரது குடும்பமும் உடனே கைது செய்யப்படுவார்கள். இதனால், அவர்கள் சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள். இ.பி.கோ.வின் 498A சட்டப்பிரிவின்படி, மனைவியும் அவரது பெற்றோர் குடும்பமும் குடும்பத்தினர் யாரையாவது ஒருவரையோ அல்லது அனைவரின் மீதோ கூட உடலியல் அல்லது மன ரீதியான கொடுமைகளுக்கான புகாரைச் சுமத்தலாம். ஆனால் இந்த வழக்கின் நம்பகத்தன்மை நீதிமன்றத்தினால் ஆராயப்படும். ஏனெனில், இப்பிரிவு பிடியாணையின்றி கைது செய்யவும், ஜாமீன் வழங்க இயலாததும் மற்றும் சேர்க்கக்கூடாததுமான பிரிவாகும். கணவனுக்கு எதிரான கொடுமைகளுக்கான காரணங்கள் என்ன?

என்னதான் சந்தர்ப்பங்களையும், சூழ்நிலைகளையும் ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் வழக்கை முடிவெடுப்பது நீதிமன்றத்தின் கடமையாக இருந்தாலும், என்ன காரணத்தினால் இக்கொடுமைகள் செய்யப்பட்டது என்பது ஒரு முக்கியமான அம்சமாகும். ஏனெனில் கணவருக்கு எதிரான சட்டங்களை மனைவி தவறாக பயன்படுத்துவது என்பது சமூகத்தில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. மேலும் அப்பட்டமாக இந்தியாவின் சில நகரத்தில் உள்ள படித்த பெண்மணிகள் காரியங்களை மாற்றி, இந்த சட்டங்களை உபயோகித்து, இவற்றை ஆயுதங்களாக்கி தங்களது கணவர்கள் மற்றும் ஒன்றுமறியா உறவினர்கள் மீது உபயோகித்து தனிப்பட்ட வஞ்சத்தை தீர்த்துக் கொள்கின்றனர். கண வனுக்கு எதிராக கொடுமைகளை சில காரணங்கள் மூலம் நிரூபிக்கலாம்.

இபிகோவின் 498-கி பிரிவு மற்றும் குடும்ப வன்முறை சட்டம் வரதட்சணை சட்டங்களை அவமதித்
தல் ஆகியவற்றின்படி கணவர் மற்றும் கணவரின் உறவினர்களின் மீது பொய்யான புகார்கள் மூலம் மனைவி குற்றஞ்சுமத்துவது.

மனைவியினால் கைவிடப்படுதல், அதாவது மனைவி வேண்டுமென்றே பிரிந்து வாழ்வதற்காக, இணைந்து வாழ மறுப்பது.

மனைவியின் தவறான நடத்தை அல்லது திருமண பந்தத்தில் இருக்கும்போதே வேறொரு நபரிடம் மனைவி பாலியல் உறவு வைத்திருப்பது. மேலும் நடத்தை தவறிய மனைவியை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

விவாகரத்திற்கான முறையான நடைமுறைகளைச் செய்யாமல் மனைவிக்கு இரண்டாம் திருமணத்தை செய்ய முற்படுவது. மனைவி, கணவனின் வீட்டை விட்டு சென்று விடுவதாகவும் மற்றும் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டுவது.

கணவரின் சட்டையை கிழிப்பது, சரியான நேரத்திற்கோ அல்லது சரியான முறையிலேயோ உணவை சமைக்க மறுப்பது மற்றும் கணவனின் உறவினர்கள் முன்பு தாலியை அறுத்தெறிவது போன்ற மனைவியின் கொடுமையான நடத்தைகள்.

உறவினர்கள் முன்பு கணவரை இழிவுபடுத்தும் விதமாக திட்டுதல் மற்றும் பழிசுமத்துதல், மேலும் சில நிலைகளில் கணவனின் அலுவலக பணியாளர்கள் முன்னிலையில் திட்டுதல்.

போதுமான காரணங்கள் இல்லாமல் மனைவி கணவருடன் தாம்பத்திய உறவு கொள்ள மறுப்பது என்பது கொடுமைக்கான காரணாகக் கருதப்பட்டு, கணவன் விவாகரத்திற்கு மனுவை பதிவு செய்யலாம்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெரியவர்கள் முன்னிலையில் கணவரின் மதிப்பைக் குறைக்கும் விதத்தில் இழிவுப்படுத்தும் வார்த்தைகளை உபயோ கித்தல். கணவர் மற்றும் உறவினர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (திமிக்ஷீ) யை பதிவு செய்து, பின்பு அது பொய் யானது என நிரூபிக்கப்படுதல்.

கணவருக்கு எதிராக மனைவியின் நடத்தை மற்றும் ஒழுக்கங்கள் தவறாக இருப்பது, அதாவது கணவனை அவரது வீட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துதல், தனிக் குடித்தனத்திற்காக கட்டாயப்படுத்துதல், கணவருக்கும் அவரது குடும்பத்தின ருக்கும் எதிராக மரியாதைக் குறைவான நடத்தை மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்துதல்.

கொடுமைக்கான வேறு சில காரணங்கள், அதாவது மனைவியின் மனநலம் பாதிக்கப்படுவது, உடற்சுகவீனம், மனைவியின் மலட்டுத் தன்மை, வேறு ஒரு நபருடன் மனைவி சட்டவிரோதமான உடலுறவு வைத்திருப்பது மற்றும் நோயினால் மனைவி பாதிக் கப்படுவது. திருமண பந்தத்திற்கு வெளியே கணவனுக்குத் தெரியாமல் மனைவி உறவினை வைத்திருப்பதும் கொடுமைக்கான காரணமாகும்.

நம்பகமற்ற தன்மையுடைய கணவன் மற்றும் கணவரின் குடும்பத்திற்கு எதிராக மனைவி தொடங்கும் குற்றவியல் விசாரணைகள்.

மாற்றுவழி இனப்பெருக்கம்


மாற்றுவழியில் இனப் பெருக்கம் செய்வதன் மருத்துவ முன்னேற்றங்கள் வெகு சுலபமாக கலாச்சாரத்தை மீறியதன் மூலம், ஓரினத் தம்பதியரை சில நேரங்களில் பல வருடங்களுக்கான விரக்தியை சந்திக்க வைத்துள்ளன. ஓரினத் தம்பதியர் குடும்பங்களைத் தொடங்குவது என்பது என்.பி.சி. தொலைக்காட்சியில் முதன்மை நேரத்தில் "நியூ நார்மல்" என்கிற புதிய தொடரை ஆரம்பிக்கும் வகையில் அதிகப் பிரசித்தி பெற்றுள்ளது. இதில் இரண்டு ஓரினச் சேர்க்கையாளர்களான ஆண்கள் வாடகைத் தாய் மூலம் தங்களது குடும்பத்தை தொடங்க முயலுவதே அடிப்படைக் கதையாகும். ஆனால், அங்குள்ள தொடர்புடைய இன்னொரு நிலையமான யூடாவில் உள்ள சால்ட் மேக் நகரத்தின் நிலையமொன்று இந்த நகைச்சுவைத் தொடரை குடும்பத்தை பற்றின இந்த நிகழ்ச்சி குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்றதல்ல என்று தடை செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியிலும், பிரயன் மற்றும் டேவிட் ஆகிய இருவரும் அந்த வாடகைத் தாயின் குருட்டுப்பிடியான பாட்டியுடன் சண்டையிட வேண்டியுள் ளது. இந்த புதிய வகையான சாதாரணம் என்பது, ஓரிகான் இனப் பெருக்க மருத்துவமான, ஓரின தம்பதியருக்கான முன்னணி இனவிருத்தி மருத்துவமனையின் ஜோனதான் கிப் சொல்வதுப் போல, இது அமெரிக்காவிற்கு, நமது நாட்டின் குடும்பங்கள் எவ்வாறு வகைப்பட்டு இருக்கின்றன என்பதைக் காண்பிக்க எடுத்த முயற்சி எனவும் ஆகலாம்.  ஆனால், இது வாடகைத் தாய் முறையை முயற்சிக்க விழையும் தம்பதியர் பெறும், அனுபவத்தை, ஏற்றுக் கொள்ள முடியாத கலாச்சாரத்தை எதிர்கொல்லும் போது, ஏற்படும் நிகழ்வுகளுக்கு இதுவே உதாரணமாகும்.

2010&ன் அமெரிக்காவின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் தகவல்படி, தோராயமாக நான்கில் ஒரு பகுதியில், அனைத்து ஓரினக் குடும்பங்களும் குழந்தைகளை வளர்க்கின்றனர். இந்த கணக்கெடுப்பு எத்தனை பேர் மாற்றுவழி இனப்பெருக்கத்தை உப யோகித்தனர் எனக் கேட்கவில்லை. ஆனால், ஒரு வாடகைத் தாயை தேடுகையில், அந்த தம்பதியருக்கு, இந்த விலையுயர்ந்த முறை பல விரக்திகளுடன், சிறு அளவு ஒத்துழைப்பே கிடைக்கின்றது.

மாற்றுவழி இனப் பெருக்கத்திற்கான செலவுகள் மிக அதிகமாவதுடன் தம்பதியருக்கு அது சவாலாகவும் அமைகிறது.  வாடகைத் தாய்க்கான கட்டணங்கள் 20,000 முதல் 40,000 அமெரிக்க டாலர்கள் வரை ஆகலாம். அதாவது இந்திய மதிப்பிற்கு 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை.

- வாடகைத் தாய் காலத்திற்கான காப்பீட்டின் பாதுகாப்பு 15,000 முதல் 25,000 அமெரிக்க டாலர்கள் வரை.

- இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க கட்டணமாக 15,000 முதல் 22,000 அமெரிக்க டாலர்கள் வரை.

- கருமுட்டை தானம் செய்பவரின் கட்டணம், 5,000 முதல் 10,000 அமெரிக்க டாலர்கள் வரை.

கருமுட்டை தான நிகழ்வை ஒருங்கிணைக்கும் கட்டணமாக 4,000 முதல் 8,000 அமெரிக்க டாலர்கள் வரை.

- மருத்துவர் அலுவலகக் கட்டணம், சோதனை சாலை, மருந்துகள் போன்றவை 13,000 முதல் 29,000 அமெரிக்க டாலர்கள் வரை, அதற்கு மேலும் ஆகலாம்.

- மேலும் இடைச் செலவுகளாக வழக்கறிஞர் கட்டணங்கள், மனநலம் மற்றும் மரபணு ஆலோ சனைகள், தானம் கொடுப்பவர்களுக்கான பிரச்சினைகளுக்கான காப்புறுதி திட்டங்கள், கூடுதலாக 1,500 முதல் 5,000 அமெரிக்க டாலர்களோ அதற்கு மேலோ பயணச் செலவுகளே ஆகலாம்.

வழக்கறிஞரான 38 வயது ஏப்ரல் நெல்சனும் மற்றும் மேஃபீல்டின் பெருவணிக பயிற்சியாளரான 49, வயது மார்கரேட் ஸ்ரீ பியோரும் பல வருடங்களான உறவில் குழந்தைகளை வைத்துக் கொள்வதா அல்லது, வேண்டாமா? என தர்க்கித்து வந்தனர். ஏழு வருடத் தம்பதியரான அவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை தேர்வு செய்து, இப்பொழுது இரட்டை குழந்தைகளைப் பெற்றுள்ளனர். ஆண் குழந்தைக்கு அடிசன் என்றும் பெண் குழந்தைக்கு ஏவெரி எனப் பெயர் வைத்தனர் அவர்களுக்கு 4 வயதாகின்றது.

2007ஆம் ஆண்டின் கோடைக் காலத்தில் கருத்தரிப்பது எப்படி என்பதாக நெல்சன் மற்றும் ஃபியோர் ஆகியோரின் பயணம் ஆரம்பமானது ஃ பியோரின் வயது மற்றும் ஹார்மோகன்கள் அளவின் காரணத்தினால், அவரால் ஆரோக்கியமான முட்டையை உருவாக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என மருத்துவர்கள் கூறியதை அடுத்து இந்த தம்பதி யின் தங்களது முதல் தடங்களை சந்தித்தனர்.

சில மாதங்கள், இத்தம்பதியினர் அவர்களுக்குள்ள வழிகளை குறித்து ஆலோசித்தனர். இதில் நெல்சன் சட்டக் கல்லூரியில் பாதிப் படிப்பில் இருக்க ஃபியோருக்கு கருத்தரிப்பின் அனுபவம் தேவைப்பட்டதால், அவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை முயற்சிக்க முடிவெடுத்தனர் (மிக்ஷிறி) . இதில் ஃபியோருக்குள் செலுத்த நெல்சனுடைய கருமுட்டைகள் உபயோகப்படுத்தப்பட்டன.

ஃ பியோரின், ÔÔஇந்த முயற்சி ஒரே சமயத்தில் உற்சாகமாகவும் மற்றும் பயமாகவும் மற்றும் களைப் பூட்டுவதாகவும் இருந்ததுÕÕ, சில நேரங்களில் இருவருமே ஹார்மோன் ஊசிகளை போட்டு, ஒவ்வொரு வாரமும் கருத்தரிப்பு மருத்துவமனைக்கு பலமுறை செல்ல நேர்ந்தது. தம்பதிகள் அவர்கள் செய்வது என்னவென்று அறிந்துக் கொள்ள கட்டாய ஆலோசனை நேரங்களை மேற்கொண்டனர். மேலும் நெல்சன் கருமுட்டை தானமளிப்பவர்களுக்குத் தேவைப்படும் இன்னும் அதிகமான பரிசோதனைகளில் பங்கெடுக்க வேண்டியிருந்தது. மருத்துவமனை வெளிப்படையாக ஆமோதித்தாலும், அதன் கோட்பாடுகளும் அல்லது சட்டங்களும் அவர்களை எவ்வாறு வகைப்படுத்த வேண்டும் என்பதில், உண்மையாக தயாராய் இருக்கவில்லை. ஃபியோர் நெல்சனின் வாடகைத் தாய் என வகைப்படுத்தப்பட இயலவில்லை. ஏனெனில், நெல்சல் கருத்தரிக்க முடியாது என்பதற்கு எந்தவொரு மருத்துவக் காரணமுமில்லை. எனவே, நெல்சன், ஃபியோருக்கு கருமுட்டை தானம் அளிப்பவர் என்று வகைப்படுத்தப்பட்டார்.

தம்பதியினர் அவர்கள் தரப்பில் சட்டப்பூர்வமான முறையிலும் சரியாக இருக்க வேண்டி இருந்தது. நெல்சனின் வாக்குறுதிபடி, ÔÔஎங்களது அனுபவத்தின் மூலம், இது போன்ற துறைகளில் விஞ்ஞானத்தைவிட சட்டம் எவ்வளவு பின்தங்கிய நிலையில் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது. முட்டைகளுடனான என்னுடைய உரிமைகள் அனைத்தையும் நான் முடித்துவிட வேண்டி இருந்தது. ஆனால், அது வளர்ச்சியடைந்தவுடன், நாங்கள் இருவரும் இணைந்த பொறுப்பை பெற்றோம். அதாவது அவளோ அல்லது நானோ யாருமே மற்றவரது, அனுமதியின்றி வளர்ந்த கருவின் உபயோகத்தைக் குறித்து முடிவெடுக்க இயலாது. ஆனால், வளர்ந்த கரு உட்செலுத்தப்பட்டவுடன், சட்டப்பூர்வமாக சிசுவுக்கும் எனக்கும் மறுபடியும் தொடர்பின்றி ஆனது என்று கூறினர்.

பெதெஸ்தாவின், சாவோஸ் சட்டக் குழுமத்தின் மைக்கேல் சாவோஸ், இரட்டையர்கள்  பிறப்பதற்கு முன்பே அத்தம்பதியர் தத்தெடுப்பதற்கான அனைத்து முறைகளையும் தயாராக வைத்திருந்தனர். அவர்களது வழக்கறிஞர் அதை பதிவு செய்தவுடன், முறையான தத்தெடுத்தல் இரண்டு மாதங்களுக்குள் நடைபெறும்  என்று கூறினார்.

பிறப்பு சான்றிதழ்கள் பெற்றோர் எண்.1 மற்றும் பெற்றோர் எண். 2 என்று மாற்றி மறுபடியும் வழங்கப்பட்டது. நெல்சன், குழந்தை பராமரிப்பு என்பதன் அடிப்படையில் எங்களது குடும்பம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் மரபணு முறையில் என்னுடைய குழந்தைகள் என்று நன்றாக அறிந்த பிறகு, பெற்றோர் என்ற தகுதியை தருமாறு நீதிபதியின் முன்பு நிற்பது மிக தரக்குறைவாக இருந்தது என்று கூறினார்.

மாற்றுவழி இனப்பெருக்கத்தை முயற்சிக்க நினைக்கும் தம்பதியர் முதலில் செய்ய வேண்டியது அதைப் பற்றி நன்கு அறிந்துக் கொள்வதே கடந்த 20 முதல் 30 வருடங்களில் மட்டுமே நவீன கருத்தரிப்பு முறைகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள், ஓரினத் தம்பதியர் குழந்தைகள் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. நம்முடைய இந்த நெடிய அனுபவத்தினால் ஓரினத் தம்பதிகள் குடும்பங்கள் தொடங்க ஒத்துழைப்பு வழங்கும் நிலைக்கு வந்துள்ளோம். இன்னும் கூட சில அனுபவங்களை நாம் கடக்க வேண்டும் என்று ஷெர்மன் ஓக்ஸ், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கருத்தரிப்பு சிகிச்சை, தத்தெடுத்தல் மற்றும் வாடகை பெற்றோர் போன்றவற்றில் சிறப்பு சிகிச்சை அளிக்கும் அபிகெய்ஸ் கிளாஸ் கூறுகிறார்.

ஒவ்வொரு பத்தாண்டுகளும், கருத்தரிப்பு மருத்துவத்தில் பல நவீன முன்னேற்றங்களை ஏற்படுத்துகின்றன மற்றும் மாற்றுவழி இனப்பெருக்கம் பெரிதளவில் மாறியுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டுமே, கருமுட்டையை உறைய வைக்கும் முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, கருமுட்டையின் வாழ்நாள், கருத்தரிக்கும் விதங்கள் மற்றும் கர்ப்பங்களின் விகிதங்களை மேம்படுத்தியுள்ளன. முன்னரே பரிசோதனை செய்து உறைய வைத்த முட்டைகளை வியாபார ரீதியில் வழங்கும் கருமுட்டை தான வங்கிகள் இத்துறைக்கே மிகவும் புதியவையாகும். இவ்வங்கிகள் எப்போதும் எந்த வகையான குடும்பத்திற்கும் வழங்குகின்றன. ஆனால், அவைகளை புதிய மாற்றங்களைப் போல மிக அதிக வெற்றிகளைத் தருவதாகக் கருதப்படுவதில்லை. ÔÔநமது துறையில் உள்ள நம்பிக்கை என்னவெனில், விஞ்ஞானம் அடையக் கூடிய வளர்ச்சியினால் தேவையான பெற்றோருக்கு சரியான விலையில் இந்த முழு முயற்சியையும் அளிக்க முன்னரே உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகள் சாதாரணமாக கிடைக்கப்பெறும் என்பதே என்று கலிஃபோர்னியாவின் டொலுகா லேக்கில் கிஃப்ட் ஜர்னி என்னும கருமுட்டை தானம் செய்யும் நிறுவனத்தின் தலைவரும், கருமுட்டை தானத்திற்கு உள்ளிருப்போரின் வழிகாட்டி என்னும் ஒரு சிறந்த விரிவான பெற்றோர் ஆகப்போகிறவர்கள் அனைவருக்குமான புத்தகத்தின் ஆசிரியருமான வென்டி வில்சன் மில்லர் கூறுகின்றார்.

ஆனால், வேகமாகச் செல்லும் நவீன மருத்துவத்தின் வேகத்திற்கு கலாச்சாரத்தினால் ஈடு கொடுக்க முடியவில்லை. மாற்றுவழி இனப்பெருக்கத்தை முயற்சிக்கும் ஓரின தம¢பதியருக்கான ஒட்டுமொத்த வளங்கள் இல்லாமையும், ஒத்துழைக்கும் குழுக்கள் இல்லாததும் மிகுந்த விரக்தியை அளிக்கின்றது. வில்சர் மில்லர், கருமுட்டை தானமளிப்பவர்களைத் தேடும் ஓரின குடும்பத்தினருக்கு போதுமான மேம்பட்ட வளங்கள் உள்ளதென நான் நம்புகிறேன் என்று கூறுகிறார். வளங்களில், எந்த நிறுவனங்களும் மிக்ஷிதி மருத்துவமனைகளும் தங்களை ÔÔஓரினச் சேர்க்கையாளர்களின் நண்பர்கள்ÕÕ என்று கருதுவதோடு, தங்களது அனைத்து கருமுட்டை தானமளிப்பவர்களையும் ஓரின தம்பதியர் அல்லது தனியான ஓரினப் பெற்றோர் ஆகியோருக்கு தானம் செய்ய சம்மதமா என வெளிப்படையாக கேட்பதும், இருக்க வேண்டும். வில்சன் & மில்லர், ÔÔநமது தானமளிப்பவர் அனைத்து வகையான குடும்பங்களுடன் இணைந்து உழைக்க தயாரா என்பதை அறிந்து கொள்வது முக்கியமாகும். (நமக்கு மட்டுமாவது) ஏனெனில், அதுவே நமக்கு வாடிக்கையாளர்களைத் தரும், எனக் கூறினார்.

நெல்சன் மற்றும் ஃ பியரோ, வடக்கு வெர்ஜூனியா மற்றும் அட்லாண்டாவில் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து அவர்கள் பெற்ற ஒத்துழைப்பிற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கின்றனர். நெல்சன், ÔÔஎங்களது, அக்கம்பக்கத்து, வீட்டாரே எங்களுடைய குடும்பத்தினர் எங்களுக்கு வீட்டில் இருக்கும் திருப்தியை தருவது என்னவென்றால், பெரும்பாலான நாட்களில் நாங்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பதோ ஓரினச் சேர்க்கை உறவில் இருக்கின்றோம் என்பது என் நினைவுக்கு வருவதில்லை. நாங்கள் இந்த தெருவில் ஒரு நாளைக்கு விட்டால் 25 தடவைகள் கூட அவர்களது ஹாட் வீல்ஸ் மூன்று சக்கர சைக்கிள்களில் சென்று வரும் முரட்டுத்தனமான இரண்டு 3.5 வயது குழந்தை களுடைய ஃபியோர் & நெல்சன் தான். நாங்கள் இப்போது, வெறும் அடிசன் ஏவெரியின் பெற்றோர் தான் என்றுக் கூறுகின்றார்.

அனைத்து தம்பதியினரும் மோசமான தடங்கல்களைச் சந்திப்பது கிடையாது. நியூயார்க் நகரத்தின் 39 வயதான ரிச் பாலேமோவும் மற்றும் 40 வயதான ஸ்டீவ் மாசா ஆகிய இருவரும் தங்களை அதிர்ஷ்டசாலிகளாக கருதுகின்றனர். பலமோ, எங்களது கருமுட்டையை தானம் அளித்தவர், நாங்கள் வாடகைத் தாய்க்கான சர்க்கில் சரோகசி சைட் என்னும் வலைதளத்தில் பார்த்த முதல் பெண்மணியாகும். மேலும் அவரோடு நாங்கள் ஸ்கைப்பில் பேசிய முதல் நிமிடத்தில் இருந்தே எங்களுக்கு அவர்களைப் பிடித்துவிட்டது. கருமுட்டையை தானமளிப்பவர் அனைத்து சோதனைகளிலும் தேறி அநேக முட்டைகளை அளித்தார். வாடகைத் தாயுடன் அதே தான் நடந்தது. சர்க்கிளின் மூலம் எங்களிடம் காட்டப்பட்ட முதல் பெண் அவர்தான். மருத்துவம் அல்லது பிற விஷயங்கள் என எதிலும் எங்களுக்கு எந்தவித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்று கூறினார்.

தம்பதியினர் இருவருமே அவர்கள் சந்திக்கும் முன்பே, மாற்றுவழி இனப்பெருக்கத்தைக் குறித்து யோசித்திருந்தனர். (அவர்கள் தனிப் பெற்றோராய் இருந்த போதே செய்திருக்கலாம்). அவர்களது உறவின் ஆறு மாத காலத்திற¢குள் அவர்கள் மாற்றுவழி இனப் பெருக்கத்தைக் குறித்து உறுதியாய் இருந்தனர். திருமணமாகி ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. அத்தம்பதியினர், முதலில் வாடகைத் தாயையும், கருமுட்டை தானமளிப்பவரையும் தேர்வு செய்வதைக் குறித்து சிறிது, பதற்றத்துடனே இருந்தாகச் சொல்கின்றனர்.

முதலில் மிகப் பெரியதாகவும் சிறிது பயமாகவும் இருந்தது. ஏனெனில், அநேக காரியங்கள் நடந்தேர வேண்டும். ஆனால் எங்கு ஆரம்பிப்பது என்று தெரியவில்லை என்று மாசா சொன்னார்.

தம்பதியருக்கு இருந்த மிகப்பெரிய சவால் என்னவென்றால், மிஸ்ஸோரியில் இருந்த அந்த வாடகைத் தாயிடம் இருந்து இவர்கள் வெகு தொலைவில் இருந்தனர். பலேமோ, எங்களிடம் இருந்து எங்கள் குழந்தை பல மாகாணங்களைத் தாண்டி இருப்பதை நினைக்கும் போது சிரிது கஷ்டமாக இருந்தது. ஆனால் எங்களது வாடகைத் தாய் அவரது கர்ப்பகால வயிற்றை புகைப்படம் எடுத்து எங்களுக்கு ஒவ்வொரு வாரமும் அனுப்பி உதவினார் என்று கூறினார். தம்பதியினரிடம் அவர்களது வாடகைத் தாய் முதல் முயற்சியிலேயே கர்ப்பம் அடையாமலும் போகலாம் என்று எச்சரிக்கப்பட்டனர். எனவே, அவர்கள் நிறைய எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால், அவர் கருவுற்றார். தற்போது 20ஆம் வார அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைக்காக அவர்கள் விமானம் மூலம் மிஸ்ஸோரி சென்று, அவர்கள் ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையை பெறப்போவதை அறிந்தனர்.

பலேர்மோவுக்கும், மாஸாவுக்கும் ஏற்கெனவே இந்த முறைகளை கையாண்ட பல நண்பர்களும் தெரிந்தவர்களும் பெரிய ஒத்துழைப்பாய் இருந்தார்கள். ÔÔஅவர்கள் குடும்பங்களை தொடங்கும் போது சந்தித்த அனைத்தையும் குறித்து மிகவும் வெளிப்படையாக எங்களுடன் பேசினார்கள், அது நாங்கள் சந்திக்கவிருப்பதைக் குறித்த ஒரு தெளிவான சிந்தனையை எங்களுக்கு அளித்ததுÕÕ என்று பலேர்மோ சென்னார். சர்க்கிள் சரோகேசி மற்றும் சிஜி இனவிருத்தியுடன் இணைந்து, இந்த தம்பதியினர் நியூயார்க் நகரகத்தின் லிநிஙிஜி சமூகக் கூடத்தில் நடைபெற்ற ஓரினத் தம்பதியருக்கான வாடகைத்தாய் முறை பற்றிய கருத்தரங்கிலும் கலந்து கொண்டனர். அவர்களது குடும்பம் மற்றும் நண்பர்களிடம் இருந்து இத்தம்பதியினர் பெற்ற அன்பு, ஒத்துழைப்பு மற்றும் அறிவுரை அவர்களது அனுபவத்தை இன்னும் மேம்படுத்தியது. ÔÔநாங்கள் முதல் நாளில் இருந்தே எங்களுடைய குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்ததன் மூலம் இதில் அவர்களை பங்குபெற செய்தோம். அவர்களில்லாமல் எங்களால் இதை செய்ய முடியாது என்றில்லை. ஆனால், அது கடினமாக இருந்திருக்கும். அதை நாங்கள் விரும்பவில்லைÕÕ என பாலேர்மோகூறினார்.

மாற்றுவழி இனப்பெருக்கத்தை தேர்வு செய்யும் தம்பதிகளுக்கு, இந்த முறையை கடந்து சென்ற தம்பதிகள் எவ்வளவு பேரை சந்தித்து பேச முடியுமோ பேசுங்கள் என பலேர்மோவும், மாஸாவும் ஆலோசனைத் தருகின்றனர். மற்றவர்கள் என்ன அனுபவித்தார்கள் என்பதை கேட்பது மிகவும் உபயோகமாய் இருக்கும். இதனால் செய்முறையை குறித்த உண்மையான எதிர்பார்ப்புகள் இருக்கும் மற்றும் இதனால், மற்றவர்கள் சந்தித்த தோல்விகளில் சிலவற்றை நீங்கள் தவிர்க்கலாம்ÕÕ என மாஸா கூறுகின்றார்.

தம்பதியர் இருவருமே லாங் ஜலண்டின் பெரிய, மிக நெருக்கமான இத்தாலிய அமெரிக்க குடும்பங்களில் வளர்ந்தனர். அவர்கள் சீக்கிரமே பிறந்த நாட்கள், விடுமுறை நாட்கள், ஞாயிறு உணவுகள், கால்பந்தாட்டப் போட்டிகள், பள்ளி விழாக்கள் போன்றவற்றின் மூலம் மற்றவர்களுக்குத் துணை நிற்பதே பெரிய குடும்பத்தில் இருப்பதன் ஒரு பகுதி என்பதை அறிந்தனர்.

ÔÔநாங்கள் அந்த வகையான ஒத்துழைப்பிலும் மற்றும் அன்பிலும் வளர்ந்தோம் மற்றும் அதே முறையில் தான் எங்கள் குடும்பங்களையும் வளர்க்க விரும்புகின்றோம். எங்கள் நண்பர்களில் சிலர் எங்களது வாழ்க்கை இப்போது எங்களது மகளை பற்றியே இனி முழுவதுமாக இருக்கும் என எச்சரிக்கின்றனர். மிகவும் நல்லது நாங்களும் அதைத் தான் விரும்புகிறோம் என்று பாலேர்மோ கூறுகின்றார்.

விடுதலைப் பத்திரம் & குழப்பங்களும், தீர்வும்



JUDGMENT                 -----  Article 55A  Vs  55C

மாவட்ட பதிவாளருக்கு எதிரான எஸ். சத்திய நாராயணன் என்பவரின் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை நடுவர் ஆய்வு மன்றத்தின் முன்பு 
முன்னிலை :
மதிப்பிற்குரிய திரு.ஜஸ்டீஸ்
எஸ்.மணிகுமார் அவர்கள்
W.P. (M.D.) எண். 4996/2007
எஸ்.சத்தியநாராயணன்..... மனுதாரர்
எதிராக
1 மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை, திருச்சி
2. துணைப் பதிவாளர், ஸ்ரீரங்கம், திருச்சி
3.உதவி ஆய்வாளர் பதிவுத்துறை, 
(உதவி  முதன்மை ஆய்வாளர், பதிவு செய்யும் துறை)

திருச்சி.... பிரதிவாதிகள் முறையீடு இதில் 09.02.2007 அன்று முதல் பிரதிவாதியின் 1.4/04/A1ன் தொடர்பாக நடை பெற்ற விசாரணைகளுக்கு சம்பந்தமுடைய அனைத்து பதிவேடு களைக் கோரியும் மற்றும் அவற்றை தள்ளுபடி செய்து, நீக்கக் கோரியும், மேலும் இதனால், பிரதிவாதிகள் நேரடியாக இதில் இரண்டாம் பிரதிவாதி யின் கோப்பில் இருந்து ஆவண எண்.174/02வை விடுவிக்க கோரியும், ஆவணக் கேட்பு நீதிப் பேராணையை வழங்குமாறு விண்ணப்பித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 226&ஆம் சட்டப்பிரி வின் கீழ் பதிவு செய்யப்பட்ட மனு

மனுதாரருக்காக: திருமதி கீதா
பிரதிவாதிகளுக்காக: திரு.பால ராமசாமி
(சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர்)
உத்தரவு:
19.02.2007&ன் படி இதில் முதல் பிரதிவாதியான மாவட்ட பதிவாளர் (திருச்சி), அவர் களின் உத்தரவினை எதிர்த்து தற்போதைய உத்தரவு மனு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனுதாரரின் வழக்கு என்னவென்றால், திருச்சியில், வார்டு எண்.2, S.No.2487ல் 1126 சதுர அடி அளவுள்ளதும், மற்ற பழைய T.S.No.1135, புதிய வார்டு , புதிய பிளாக் 13, புதிய டவுன் கணக்கெடுப்பு எண். 98ல் 840 சதர அடி அளவுள்ளதுமான இரண்டு உடைமைகளும் மனுதாரரின் தாயாரால் முறையே 1985 மற்றும் 1995 ஆகிய ஆண்டுகளில் வாங்கப்பட் டுள்ளன. அதன் பிறகு, அவரது தாயார் 10.6.1995 என தேதியிட்டு, இரண்டு விற்பனை ஒப்பந்தங்களின் கீழ் அவரால் வாங்கப்பட்ட இரண்டு சொத்துக்களையும் மனுதாரர் மற்றும் அவரது சகோதரர் திரு.நாகரா ஜன் ஆகிய இருவரது பெயருக்கும் தனது இறுதி வாக்கு மூலம் மற்றும் உயிலில் மாற்றி கொடுக்குமாறு எழுதியிருக்கின்றார். மேலும்,  18.08.1995ல் மனுதாரரின் தாயார் மரணமடைந்த தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிலின் படி, இவ்விருவரும் அச்சொத்துகளுக்கு ஒருங்கிணைந்த உரிமையாளர்களாவர். மேலும் மனுதாரரின் சகோதரர் அவரது பகுக்கப்படாத உரிமை, மனுதாரருக்கு சாதகமாக ரூ.50,000/க்கு அளித்து இதனை செயல்படுத்தும் விதமாக, ஒரு விடுவிக்கும் ஒப்பந்தத்தையும் நடைமுறைப்படுத்தி, மேலும் இவ்வொப்பந் தம் பதிவு செய்யும் நாளான 12.11.2002 அன்றும் உதவி பதிவாளர் (ஸ்ரீரங்கம்) முன்பும் சமர்ப் பிக்கப்பட்டுள்ளது. எனினும், சட்டப் பிரகாரம் நடைமுறைப்படுத்தியப் பிறகும் இரண்டாம் பிரதிவாதி, மேலே சொல்லப்பட்ட ஆவணத்தின் தன்மையை தெளிவுப்படுத்த வேண்டியும், மற்றும் இதில் முதல் பிரதிவாதியான திருச்சி மாவட்ட பதிவாளரிடம் இருந்து தற்போதைய பரிவர்த்தனைக்கான முத்திரைச்  சட்டத்தின் சரியான சட்டப் பிரிவைவர வேண்டியும், ஆவணத்தை தன்னிடமே வைத்துக் கொண்டார்.

மேலும், 18.02.2003&ம் தேதி யின் விசாரணைகளின் போது, 2004ன் பக்கம் 173 மற்றும் 174ல் உள்ள, மனுதாரரின் சகோதரரால் நடைமுறைப்படுத்தப் பட்ட ஆவணங்கள் இந்திய முத்திரைச் சட்டத்தின் 55(சி) சட்டப் பிரிவின் கீழ் வருவது எனவும் மேலும் அவ்வுடைமைக்கான சந்தை மதிப்பை பொறுத்து முத்
திரை வரி சேகரிக்கப்படும் எனவும் முதல் பிரதிவாதியினால் தெளிவுப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல் பிரதிவாதி, மனுதாரரிடம், 18.02.2003ம்  தேதியின் விசாரணைகளில் அவர் திருப்தி அடையவில்லை என்றால், அவர் சென்னை, பதிவு செய்யும் துறையின் முதன்மை ஆய்வாளர் முன்பு முறையீடு செய்யலாம் எனவும்  தகவல் அளித்துள்ளார். மேற்கூரியபடி 09.03.2004 அன்று மனுதாரர் அனைத்து ஆவணங்களுடன் பதிவு செய்யும் துறையின் முதன்மை ஆய்வாளர், சென்னை, முன்பு முறையீடு செய்தார். பதிவு செய்யும் துறையின் முதன்மை ஆய்வாளர், இதில் முதல் பிரதிவாதியினால் எந்த ஒரு இறுதி உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, இம்முறையீட்டை தக்க வைக்க இயலாது எனக் கூறி மனுதாரரால் பதிவு செய்யப்பட்ட மனுவை திரும்ப அளித்ததோடு, முதல் பிரதி வாதியின் முன்பு ஒரு முறையீடு செய்யுமாறு மனு தாரரிடம் தெரிவித்துள்ளார். மேலும் 03.04.2006 அன்று நடந்த விசாரணைகளில் முதல் பிரதிவாதி மனுதாரரிடம், அவரது சகோதரரால் நடைமுறைப்படுத்தப்பட்ட விடுதலை ஒப்பந்தம் இந்திய முத்திரை சட்டத்தின் (55 சி) &பிரிவின் கீழ் வரும் எனவும், மேலும் சட்ட விசாரணைகளை இந்திய முத்திரை சட்டத்தின் பகுதிகள் 38 மற்றும் 40&களின் கீழ் எடுப்பதன் மூலம், முத்திரை வரியாக ரூ.87,137/ சேகரிக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கின்றது.

மேலும், இந்த ஆவணம் ரூ.2000/ மதிப்புள்ள முத்திரைத் தாளின் மீது மட்டுமே நடை முறைப் படுத்தப்பட்டுள்ளதால், விடுபட்ட முத்திரை வரித் தொகையாக மேலும் ரூ.85,137 விதிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கூறப்பட்டத் தொகை ஏன்  விதிக்கப் படக்கூடாது என்பதற்கான காரணத்தை தெரிவிக் கவும்  மற்றும் விதிக்கப்பட இருக்கும் அபராதத் தொகைக்காகவும் மனுதாரர் அழைக்கப்பட்ட தாகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்கூரியதை பெற்றவுடன் மனுதாரர் முதல் பிரதிவாதியிடம், விடுதலை ஒப்பந்தம் தனது சகோதரரால் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் அது இந்திய முத்திரை சட்டத்தின் 55A சட்டப் பிரிவின் கீழே வரி விதிக்கப்பட வேண்டியது என்ற விளக்கத்தை சமர்ப்பித்துள்ளார்.

மனுதாரரால் சமர்ப்பிக்கப்பட்ட விளக்கத்தில் திருப்தியடையாததால், பிரதிவாதிகள், சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இந்திய முத்திரைசட்டத்தின் 55(சி) சட்டப்பிரிவின் கீழே முத்திரையிடப்பட வேண்டும் எனவும், மேலும் மேற்கூறிய ஆவணத்திற் கான விடுபட்ட தொகையாக ரூ.85,137/ விதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு மார்ச் 2006ல் காரணத்தைக் காட்டச் சொல்லி அற்விப்பினை வழங்கியுள்ளனர். எனவே ஏன் குறிப்பிடப்பட்ட தொகை முத்திரை வரியாக விதிக்கப்படக் கூடாது என்பதற்கான காரணத்தை காண்பிக்குமாறு மனுதாரர் அழைக்கப்பட்டார். 15 நாட்களுக்குள் இதனை காண்பிக்கத் தவறினால், அபராதம் விதிக்கப்படும். அதனால், மனுதாரர் முதல் பிரதிவாதி முன்பு 03.07.2006 அன்று விளக்கத்தை சமர்ப்பித்தார். விளக்கம் பரிசீலனை செய்யப்படாத நிலையில் மனுதாரர், இரண்டாம் பிரதிவாதியின் கோப்பு களில் இருக்கும் எண்  174/2004 என்னும் ஆவணத்தை விடுவிக்கும் நோக்கத்தில் இந்த நீதிமன்றத்தின் முன்பு ஆவணக் கேட்பு பேராணை மனுவை 2007ன் W.P எண் & 1084 ஒன்றை பதிவு செய்தார்.

இது தொடர்பான விசாரணையின் போது, விதிமுறைகளின்படி சிறப்பு அரசு வழக்கறிஞர், மனுதாரர்பதிவுசெய்தமறுப்புகளுக்கு 12.02.2007ல் பிரதிவாதிகள் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஆதாரங்களை சமர்ப்பித்தார். எனவே 19.02.2007&ன் உத்தரவின் பேரில் இந்நீதிமன்றம் ஆவணக் கேட்புப்
பேராணை மனுவை தள்ளுபடி செய்து, மனு தாரருக்கு உடனே உத்தரவை வழங்குமாறு முதல் பிரதிவாதிக்கு உத்தரவிட்டது. எனினும் மனுதாரர், 19.02.007&ன் உத்தரவை 2007 மார்ச் மாதத்தில் தான் பெற்றுள்ளார். இதற்குள், விசாரணைகளை, இந்திய முத்திரை சட்டத்தின் 38 மற்றும் 40ஆம் பிரிவுகளின் கீழ், எடுப்பதன் மூலம், முத்திரை வரியாக ரூ.73,905/ மற்றும் முத்திரை வரியாக விதிக்கப்பட்ட தொகையாக ரூ.71,905 மற்றும் அபராதத் தொகையாக ரூ.2155/&ம், மொத்தமாக ரூ.74,060/& விடுப்பட்ட முத்திரை வரித்தொகையாக சேகரிக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்து, முதல் பிரதிவாதியின் உத்தரவு தன்னிச்சையான, சட்ட விரோதமான மற்றும் சட்டத்தில் நிறுவ முடியாததுமாய் இருப்பதாக முறையிட்டு தற்போதைய ஆவணக் கேட்பு பேராணை மனு மற்றவற்றிற்கிடையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு ஒரு மறுத்துரைக்கப்பட்ட ஆணையை பிறப்பிப்பதற்கு முன்பு பிரதிவாதிகள் விசாரணையை நடத்தியிருந்தால், மனுதாரர் கேள்விக்குரிய இந்த ஆவணம், இந்திய முத்திரை சட்டத்தில் 55(C) சட்டப்பிரிவின் கீழே தான் வரும் என்பதை தகுந்த சான்றுகள் மற்றும் அரசு உத்தரவுகளை சமர்ப்பித்து, பிரதிவாதிகளிடம் ந¤ரு பித்திருப்பார் எனவும் முறையிடப்பட்டு உள்ளது.

ஆவணக் கேட்புப் பேராணை மனு என்னதான் 2007&ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு சாதகமான ஆணையுறுதி, ஆவணங்களில் உள்ள காரியங்களை வலியுறுத்தி, பிரதிவாதிகளால் எந்தவொரு எதிர் ஆணையுறுதி ஆவணமும் பதிவு செய்யப்படவில்லை.

பதிவு செய்வதற்காக, சமர்ப்பிக்கப்பட்ட உடைமையின் மீது செலுத்தப்பட வேண்டிய முத்திரை வரியின் சதவீதத்தை பரிந்துரைக்கும் இந்திய முத்திரை சட்டத்திற்காக வகுக்கப்பட்ட 55-A  என்னும் சட்டப்பிரிவை மேற்கோள் காண்பித்து, மனுதாரர் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் திருமதி கீதா அவர்கள், விடுதலை ஒப்பந்தம் மனுதாரரின் சகோதரரால் முறையே 10.06.199&ல் அவரது தாயாரால் நடைமுறைப்படுத்தப்பட்ட உயிலின் மூலம் சொந்தமாக்கப்பட்ட பிரிக்கப்படாத சொத்தில் அவரது, பங்கில் உருவாக்கப்பட்டது. மேலும் ஒப்பந்தம் 23கி  பிரிவின்படியோ அல்லது சட்டப் பிரிவு 55 கி வின் உட்பிரிவுகளில், ஙி.சி மற்றும் ஞி படியோ வழங்கப்பட்டதல்ல. எனவே இதன் மதிப்பிற்கு ஒவ்வொரு ரூ.100/&க்கும் ரூ.1/& முத்திரை வரியாக செலுத்தப்பட வேண்டும் அல்லது விடு தலைக்காக இருக்கும் சொத்தின் சந்தை மதிப்பின் ஒரு பகுதி, அதிகபட்சமாக ரூ.10,000/& செலுத்தப்பட வேண்டும் என சமர்ப்பித்தார்.

இதனடிப்படையில், அவர் இந்நீதிமன்றத்தில் சட்டத்தின் 23&ஆம் பிரிவு மற்றும் முத்திரை சட்டத்தின் திட்டத்தின் பிரிவுகள் 55, A,C மற்றும் D ஆகியவற்றைக் குறித்தும் விளக்கினார். மேலும் 11.01.2002 அன்று சென்னை, பதிவுத் துறையின் முதன்மை ஆய்வாளர், அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் மற்றும் பதிவுத் துறையின் அனைத்து இணை முதன்மை ஆய்வாளர்களுக்கும் அனுப்பிய கடிதத்தை இந்நீதிமன்றத்தில் மேற் கோள் காட்டி, சட்டப்பிரிவு 55 A வின் கீழ் பதிவு செய்வதற்கு ஏதேனும் விடுவிக்கும் ஒப்பந்தம் வரும் சமயத்தில், சட்டப்பிரிவு 58 (A) (1) என்னும் திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்படும் சொத்துக்கான சரியான முத்திரை வரி குறித்து, மேற்குறிப்பிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் குறிப்பிட்ட விதி முறைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றும், அவர் சமர்ப்பித்தார் மற்றும் முத்திரை வரியை விதிப்பதற்காக, அந்த சொத்தின் மீது எந்தவொரு விதிமுறைகளுக்குட்பட்ட மதிப்பையும் சுமத்த வேண்டியதில்லை. மேலும் அவர், 01.03.1999&ல், சென்னை, தலைமைச் செயலகம், அரசு வியாபார வரிகள் துறையின் செயலாளரின் கடிதம் எண்.4860/J1/98-A வையும் மற்றும் 10.08.2006ல் வியாபாரவரிகள் மற்றும் பதிவுத் துறையின் அரசாணை எண். MS.No.85யையும் அரசு தரப்பு கடிதங்களின் பொருள் என மேற்கோள் காட்டி, இவற்றில் Ôகுடும்பம்Õ என்னும் வார்த்தை சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை உள்ளடக்கியதாகும் என்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். எனவே, சகோதரர் களுக்கு இடையே விடுவிப்பு ஒப்பந்தம் நடை முறைப்படுத்தப்படும் நிலையில், 55-C பிரிவு இதில் சேர்க்கப்படுவதில்லை. மேலும் அத்தகைய சூழ்நிலைகளில், சொத்தின் மீது செலுத்தப்பட வேண்டிய முத்திரை வரி ஒவ்வொரு பகுதியின் 100&க்கும் ரூ.1/ ஆகும். விடுதலை தொடர்பான, சொத்தின் சந்தை மதிப்பின் ரூ.13/ அல்ல.

11.01.2002 அன்றும் 45794/C5/2001 என்னும் கடிதம், சென்னை, பதிவுத்  துறையின் தலைவரிடம் இருந்து, அனைத்து பதிவுத் துறையின் இணை முதன்மை ஆய்வாளர்களுக்கும் மற்றும் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் அனுப்பப்பட்டது. இதில் விற்பனை, அன்பளிப்பு, தீர்வை, பங்கிட்டளித்தல், பங்கு போன்றவற்றின் மீது உருவாக்கப்படும் இணை உடைமையுரிமைத் தொடர்பாகஉள்ள வித்தியாசங்களையும், அல்லது வேறொருவர் சொத்தின் மீது ஏதாவது ஒரு தரப்பினர் பகுக்கப்படாத பங்கை பெறுவது மற்றும் குறிப்பிட்ட நிலைகளான சேர்ந்து சுதந்திரிக்கப்பட்ட சொத்துக்கள், வாரிசு முறையில் சுதந்தரிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விடுதலை உரிமைகளைக் குறித்தும் பதிவுத் துறைகளின் முதன்மை ஆய்வாளர், பதிவு செய்யும் துறை, சென்னை, அவர்களின் தெளிவாக்கங்கள் இருந்தன. மனுதாரரின் வழக்கறிஞர் இதனை மேற்கோள் காண்பித்து, ஒரு தனிப்பட்ட நபரின் செயல்பாட்டினால், விற்பனை அன்பளிப்பு  பான்றவற்றினால் உருவாக்கப்படும் இணை உடைமையுரிமைகளின் உரிமைகளுக்கும் மற்றும் சேர்ந்து சுதந்தரித்தல், விருப்ப ஆவண வழி உரிமைகள் போன்றவற்றினால், உருவாக்கப் படும் இணை உடைமையுரிமைகளின் உரிமைகளுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது என சமர்ப்பித்தார். மேலும் விருப்ப ஆவண வழி உரிமையின் மூலம் உடைமைகள் சுதந்திரக்கப்பட்டால், அவ்வுடைமையின் உயிலின் மூலம் வரும் விடுதலையுரிமை, அதன் இணை உரிமையாளர் அல்லது குடும்ப உறுப்பினர், இவ்வழக்கில், மனுதாரரின் சகோதரரிடம் வரும்போது, சட்டப்பிரிவு 55-A வின் முத்திரை வரியே பொருந்தும். மற்றும் இந்திய முத்திரை சதட்டத்தின் மி திட்டத்தின் 55C சட்டப்பிரிவின் கீழ் வராது, எனவும் சமர்ப்பித்தார். மேற்சொன்ன காரணங்களால் குறைக்கூறப்பட் டுள்ள ஆவண எண். 174/02 வை விடுவிக்க வேண்டும்மென பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் விண்ணப்பித்தார்.

இதனை எதிர்த்து, சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞரான திரு.பாலராமசாமி அவர்கள்,  மூலம் ஆவண எண் .174/2002- வின் விடுவிப்பு ஒப்பந்தம் 08.11.2002 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. எனவே, இதற்காக செலுத்தப்பட வேண்டிய முத்திரை வரி இந்திய முத்திரை சட்டத்திற்கான மி திட்டத்தின் 55C சட்டப்பிரிவின் கீழ் நிர்ணயிக்கப்பட வேண்டும் என சமர்ப்பித்தார். மேலும் அவர், முன்னர் இந்திய முத்திரை சட்டத்திற்கான மி  திட்டத்தின் 55 A சட்டப்பிரிவின்படி, 05.03.2000 வரை, மற்றொரு நபர் மீதோ அல்லது குறிப்பிட்ட எந்த ஒரு உடை மையின் மீதே ஒரு நபர் தள்ளி வைக்கக் கோரி ஒரு விடுதலை ஒப்பந்தத்தை உருவாக்கினால் அதற்காக பிணையக் கடன் ஒப்பந்த பத்திரமாக 3%, முத்திரை வரியாக செலுத்தப்பட வேண்டும். மற்றும் இந்திய முத்திரைச் சட்டத்திற்கான மி திட்டத்தின் 55B சட்டப்பிரிவின் கீழ் இரவல் பெயர் உரிமையின் விடுவிப்பின் போது, விடுவிப்பின் முக்கிய அம்சமான, சொத்தின் சந்தை மதிப்பின் மீது முத்திரை வரி செலுத்தப்பட வேண்டும் எனவும் சமர்ப்பித்தார்.

மேலும் அவர், மனுதாரரின் சகோதரரும், இணை உரிமையாளருமானவர். 18.12.2002 அன்று மனுதாரருக்கு சாதமாக, அவர்களிருவருக்கும் பொது உரிமையுடைய சொத்தின் மீது தனது உரிமையை விட்டுக் கொடுத்து ஒரு விடுதலை ஒப்பந்தத்தை செயல் படுத்தினார். மற்றும்  சொல்லப்பட்ட உடைமை சட்டத்தின் 55கி ஆம் பிரிவின் கீழ் வரவில்லை என்பதால், அது சந்தை மதிப்பின் மீது மட்டும் 13% மட்டுமே மதிப்பிடப்பட வேண்டும். இது 16.12.2004 வரை மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. திட்டத் தின் 55C சட்டப்பிரிவு 2004ஆம் வருடத்தில் தான் 2004ன் 31ஆம் சட்டத்தினால், திருத்தியமைக்கப்பட்டது. இதனால் திருத்தியமைப்பதற்கு முன்பு இருந்த சொற்றொடர் மற்றும் கூற்றான மற்றொரு இணை உரிமையாளர் மற்றும் கூற்று, சொற்றொடர் மற்றும் கூற்றான குடும்ப உறுப்பினர் அல்லாத மற்றொரு உரிமையாளர் மற்றும் கூற்று என மாற்றியமைக்கப்பட்டது எனவும் சமர்ப்பித் தார். எனவே, அவர், 16.12.2004 வரை ஒரு இணை உரிமையாளருக்கு சாதகமாக மற்றொரு இணை உரிமையாளரால் வழங்கப்படும் விடுதலை ஒப்பந்தத்திற்கு பொருந்தும் முத்திரை வரி சந்தை மதிப்பின் 13% தானே ஒழிய ஆவண மதிப்பின் 1% அல்ல எனவும் எதுத்துக் கூறினார்.

அவர் மேலும், 2004&ன் 31ஆம் சட்டத்தின் திருத்தியமைப்பிற்கு முன்பு நடப்பில் இருந்த 55C சட்டப்பிரிவு, எந்தவொரு உடை மையும் விடுவிக்கப்படும் போது (23A பிரிவின்படி வழங்கப்படும் விடுதலை அல்ல) அல்லது இரவல் பெயர் உரிமையின் விடுவிப்பின் போதும், ஒரு குறிப்பிட்ட சொத் தின் எதிராகவோ அல்லது ஒரு நபரின் மீதோ உள்ள கோரும் உரிமையை ஒரு நபர் விட்டுக் கொடுப்பாரானால், செலுத்தப்பட வேண்டிய முத்திரை வரி, பிணைய கடன் ஒப்பந்தப் பத்திரத்திற்கு செலுத்தப்படும் அதே முத்திரை வரித் தொகையாகும். இந்த முறை மனுதாரரால் சமர்ப்பிக்கப்பட்ட சொத் திற்கு பொருந்தாது என்பதனை வலியுறுத்தினார்.

மனுதாரரால் முன்வைக்கப்பட்ட நிருபணங்களுக்கு பதில் கூறும் வகையில், 11.10.2000 அன்று பதிவுத் துறையின் முதன்மை ஆய்வாளர் சென்னை அவர்களின், அனைத்து மாவட்ட பதிவாளர்க ளுக்கும் மற்றும் அனைத்து பதிவு செய்யும் துறையின் இணை முதன்மை ஆய்வாளர்களுக்கும், அனுப்பட்ட தெளிவாக்கங் களையும் மேற்கோள் காட்டி, இதுபோன்ற உரிமையின் விடுவிப்பின் மூலம் உடைமை யில் பகுக்கப்படாத பங்கினை ஒரு இணை உரிமையாளர் பெற்றால், அது இந்திய முத்திரை சட்டத்தின் சட்டப்பிரிவு 55C &யின் கீழேயல்லாமல் சட்டப்பிரிவு 55A வின் கீழ் வராது என்று அவர் சமர்ப்பித்தார். அவரை பொருத்த வரையில், ஒரு உயிலின் வழியாக கிடைக்கப்பெறும் உடைமையானது இந்திய முத்திரைச் சட்டத்தின் சட்டப்பிரிவு 55கி வின் கீழ் வராது எனவே மனுதாரர் முத்திரை வரியாக சந்தை மதிப்பின் மீது 13% செலுத்த வேண்டியவராகிறார். அவர் மேலும், சட்டத்தின் 55சி சட்டப்பிரிவு திருத்தியமைக்கப்பட்டு 2004&ன்  31ஆம் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரையில், ஒரு குறிப்பிட்ட சொத்தின் மீது இணை உரிமையாளர்களுக்கு இடையில் பொதுவான உரிமை இருக்குமானால், ஒவ்வொரு ரூ.100/&க்கும் ரூ.13% செலுத்துவதோ விடுவிப்பின் காரணமான அந்த உரிமையின் சந்தை மதிப்பின் ஒரு பகுதியை செலுத்துவதோ பொருந்தும் என்பதனை சமர்ப் பித்து, இந்த தெளிவாக்கங்கள் இவ்வழக்கில் கூற்றுகளுக்குப் பொருந்தாது என்று எடுத்துக் கூறினார்.

மேலும் அவரது வாதம் என்னவெனில், இணை உரிமையாளருக்கு சாதகமாக உள்ள விடுவிப்பு ஒப்பந்தத்தை பொருத்தவரையில், சட்டப் பிரிவு 55C யை பொருத்துவதில் சில குழப்பங்கள் நடந்துள்ளன. மேற்சொன்ன சட்டம், 16.12.2004 அன்று தான் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில், ஆவணம் 18.12.2004 அன்று தான் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு சந்தை மதிப்பின் மீது ரூ.13/& செலுத்த வேண்டும் என்பதே மேற்கூறிய காரணங்களினால் அவர், குறைகூறப்பட்ட உத்தரவில் எவ்வித சட்ட விரோதமான காரியமும் பிரகடனப்படுத்தப்படவில்லை என்று சமர்ப்பித்தார். பதிவுகளில் இருக்கும் அனைத்து காரியங்களும், இரு தரப்பினரின் வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட பிறகு கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது.

இவ்வழக்கின் கூறுகளை கவனிக்கும் முன்பு, இதில் உள்ள விதிகளை சுருக்கமாகக் காண்பது மிகவும் அவசியமாகும். இந்திய முத்திரை சட்டத்தின் 23A சட்டப்பிரிவு, ஒப்பந்தங்களாக விதிக்கப்படக் கூடிய, சந்தைக்குரிய கடனீட்டு ஆவணங் களின் அடமானத்துடன், தொடர்புடைய குறிப் பிட்ட சில சொத்துக்களை குறித்து பேசுகிறது. அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கூற்று 23 கி ஒப்பந்தங்களாக விதிக்கப்படக்கூடிய சந்தைக்குரிய கடனீட்டு ஆவணங்களின் அடமானத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட சில சொத்துக்கள்

(1) ஒரு உடைமை (கடனுறுதி பத்திரமோ அல்லது ரசீதோ அல்லது பொருள் மாற்றமோ இல்லாமல்) நிலுவையில் இருக்கும் அல்லது எதிர்காலத்திற்கான கடனுக்காகவோ அல்லது முன்னரே வாங்கிய பணத்திற்காகவோ அல்லது கடனாக பெறப்படக் கூடிய தொகைக்காகவோ பாதுகாப்புக்காக அல்லது சந்தைக்குரிய கடனீட்டு ஆவணமாக முன்னராக வைக்கப்பட டுக்கப்படுவது அல்லது) மீட்கப்படக்கூடியதாகவோ அல்லது முத்திரை யிடப்பட்ட மாற்றத்தை தகுதியுடையதாய் மாற்றி அதனை கடனீட்டு ஆவணமாகவோ அல்லது சந்தைக்குரிய கடனீட்டு ஆவணமாகவோ செய்யும் போது, அதன் வரி ஒரு ஒப்பந்தத்திற்காகவோ அல்லது ஒப்பந்தத்தின் பதிவுக்குறிப்பாக கருதப்பட்டு, மி திட்டத்தின் (5(வீ) ஆம் சட்டப்பிரிவு) கீழ் வரி விதிக்கப்படும்.

2) இது போன்ற எந்த ஒரு உடைமையை விடுவிப்பதற்கோ அல்லது வெளிக் கொணரவோ, கீழ் வரும் வரி மற்றும் கூற்றின் படியே விதிக்கப்படும்.

06.03.2000& அன்று முதல் நடப்பில் வந்த திருத்தியமைக்கப்பட்ட 2000ன் 1 சட்டம், திருத்துவ தற்கு முன்பு இந்திய முத்திரை சட்டத்தின் மி திட்டத் திற்கான 55A சட்டப்பிரிவாக இருந்தது. அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

4 கூற்று: 55A  எந்த ஒரு உடைமையின் (23கி பிரிவின் படி உள்ள விடுவிப்பாய் இல்லாமல்) விடுவிப்பின் போது, ஒரு நபர் இன்னொரு நபரின் மீதோ அல்லது எந்தவொரு குறிப்பிட்ட சொத்தின் மீது உள்ள கோரும் உரிமையை விட்டுக் கொடுப்பது மற்றும் கூற்று.

தமிழ்நாடு சட்டம் 2000&ன் படி வாக்கியம் மற்றும் கூற்றான: இரவல் பெயரில் நடவடிக்கை எடுக்கும் உரிமையை விடுவிப்பது மற்றும் கூற்று இந்த சட்டப்பிரிவின் உட்பிரிவுகளான ஙி,சி  மற்றும் சி &ல் பரிந்துரைக்கப்பட்ட விடுதலை ஒப்பந்தங்களுடன் தொடர்பு கொண்டு மாற்றியமைக்கப்பட்டது. மேலும், திருத்தியமைத்த பிறகு அது கீழ்வருமான இருந்தது.

4 கூற்று: 55A, எந்த ஒரு உடைமையின் விடுவிப்பும் (பகுதி 23A &வில் உள்ள விடுவிப்பு அல்லாமல்) அல்லது (இந்த சட்டத்தின் உட்பிரிவு களான B,C மற்றும் ஞி யின் படி உள்ள விடுவிப்பு) ஒரு நபர் மற்றொரு நபர் அல்லது ஒரு குறிப்பிட்ட சொத்திற்கு எதிராக உள்ள அவரது கோரும் உரிமையை விட்டுக் கொடுப்பதாகும் மற்றும் கூற்று.

06.03.2000 முதல் நடப்பில் வந்த தமிழ்நாடு சட்டம் 2000&னால் மாற்றப்பட்ட சட்டப்பிரிவு 55C மற்றும்  பின் வருமாறு:&

இணை உரிமையாளருக்கு சாதகமாக உரிமையை விட்டுக் கொடுப்பது அதாவது, எந்தவொரு உடைமையின் மீது தனக்குள்ள கோரும் உரிமையை ஒரு இணை உரிமையாளர் (குடும்ப உறுப்பினரல்லாத) மற்றொரு இணை உரிமையாளருக்கு சாதகமாக அவர்களிருவருக்கும் பொதுவான உரிமையுள்ள ஏதேனும் குறிப்பிட்ட ஒரு சொத்தின் மீது விட்டுக் கொடுப்பது)

(வீ) அது அசையா சொத்துடன் தொடர்புடையதாய் இருந்தால் ஒவ்வொரு ரூ.100க்கும் (பதிமூன்று ரூபாய்) செலுத்தப்பட வேண்டும். உடைமையுள்ள இடம் அல்லது அதன் இடத்தின் சந்தை மதிப்பை பொறுத்து இது செலுத்தப்படும். இந்நிலையில் உடைமையின் சென்னை பெருநகர திட்டமிடுதலின் சந்தை மதிப்பையோ அல்லது பெருநகர வளர்ச்சி திட்டத்தை பொருத்தோ இருக்க வேண்டும்.

மதுரை கோயமுத்தூர், சேலம் மற்றும் திருச்சி ராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி நகரம்.  வேறு இடத்தில் உடைமை இருந்தாலோ, பின் விடுவிப்பின் பொருளான இவ்வுடைமையின் சந்தை மதிப்பின் ஒரு பகுதிக்கு, ஒவ்வொரு ரூ.100&க்கும் (பன்னிரண்டு ரூபாய்) அசையா சொத்திற்கு செலுத்தப்பட வேண்டும்.

விடுவிப்பின் பொருளான வேறு ஏதாவது உடைமையாக இருந்தால் சொத்தின் ஒவ்வொரு ரூ.100&க்கும் ஏழு ரூபாய் அல்லது சந்தை மதிப்பின் ஒரு பகுதி செலுத்தப்பட வேண்டும்.

ஞி பங்குதாரரின் சார்பாக உரிமை விடுவிக்கப் பட்டால் ஒவ்வொரு ரூ.100/&க்கும் மூன்று ரூபாய் செலுத்தப்பட வேண்டும் அல்லது

(வீ) ஒரு அசையா சொத்தின் விடுவிப்பின் போது, அது அந்த பங்குதாரர் அல்லது பங்குதாரர்களின் சார்பாக உரிமை விடுவிக்கப்படும் போது, மற்ற பங்குதாரர்களின் விடுவிப்புக்கேற்றவாறு ஒவ்வொரு ரூ.100/&க்கும் (பதிமூன்று ரூபாய்) செலுத்தப்பட வேண்டும். ஒரு பகுதியான அல்லது சந்தை மதிப்பின் ஒரு பகுதியான அசையா சொத்தின் பங்குதாரர் களாக குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் இதுவே வரியாக நிர்ணயிக்கப்படும். அது அசையும் சொத்தாக இருந்தால், அது சென்னை பெருநகர திட்ட மிடுதல் பகுதியில் மற்றும் நகரப் பகுதியில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இது போன்ற விடுவிப்பு பெருநகரங்களான மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி நகரங்களில், குடும்ப உறுப்பி னரல்லாத பங்குதாரர்களிடையே ஏற்படும் போது,

 ஒவ்வொரு ரூ.100&க்கும் (பன்னிரண்டு ரூபாய்) செலுத்தப்பட வேண்டும் அல்லது வழக்கிற் குரிய அந்த அசையா சொத்து பிற இடங்களில் இருந்தால் சந்தை விலையின் ஒரு பகுதி செலுத்தப் பட வேண்டும்.

55C சட்டப்பிரிவில் இடம் பெற்றிருந்த வாக்கியம் மற்றும் கூற்றான Ôமற்றொரு இணை & உரிமையாளர்Õ மற்றும் கூற்று என்பது 2004ன்31&ஆம் சட்டத்தி னால் திருத்தியமைக்கப்பட்டு, மற்றொரு இணை உரிமையாளர் மற்றும் கூற்று என்னும் வாக்கியம் கீழ் வரும் வாக்கியம் மற்றும் கூற்றினால், மாற்றிய மைக்கப்பட்டது. அது 16.12.2004 முதல் நடப்பில் Ôகுடும்ப உறுப்பினரல்லாத மற்றொரு இணை உரிமையாளர் என மாற்றப்பட்டது எனவே, 2000ன் 1 ஆம் சட்டத்தின் அறிமுகத்தின் போது இருந்த 55C,  2004ன் 31 திருத்தியமைக்கப்பட்ட காரணத்தினால் 16.12.2004 முதல், இணை உரிமைத்துவம் என்பது தரப்பினர்களால் உருவாக்கப்படுவது. மேலும் இந்த உரிமை விற்பனை, அன்பளிப்பு, தீர்வு, பங்கீட்டளித்தல் போன்ற முறைகளின் மூலம் ஒன்றாக சேர்ந்து சம்பாதித்தல் அல்லது மற்றொருவர் சொத்தின் மீது ஏதேனும் ஒரு தரப்பினருக்கு கிடைக்கும் பகுக்கப் படாத பங்கினால் உருவாக்கப்படுவதாகும்.

இதனை விளக்க: ஒரு குடியிருப்பு பகுதி / அடுக்கு மாடி குடியிருப்புகள் போன்வற்றில் விற்பனை, அன்பளிப்பு போன்ற பல வழிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் வாகனம் நிறுத்துமிடம், கிணறு மற்றும் நடைபாதை, தண்ணீர் சேமிக்கும் தொட்டி போன்வறற்றில் இணை உரிமைத்துவம் இருக்கலாம்.

இணை உரிமைத்துவ உரிமை, ஒன்றாக சேர்ந்து சுதந்தரித்த உடைமைகள் கூட்டமைப்பு உடைமைகள், பொதுவான விதிகளின் மூலம் விடுவிக்கப்பட்ட வைகள், மணவாழ்க்கை உரிமைகளை விடுவித் தல், வாடகை உரிமைகளை விடுவித்தல், அடமான உரிமைகளை விடுவித்தல் மற்றும் பிற விடுவித்தல்களின் மூலம் உருவாக்கப்படுகின்றது. நிச்சயமாக, முன்னரும் தற்போதும் உரிமைகள் உருவாக்கப்படுவ தற்திடையில் வித்தியாசம் இருக்கின்றது. அதனால் தான், 2000&ல் ஒரு உடைமையின் விடுவிப்பின் போது விதிக்கப்பட வேண்டிய முத்திரை வரியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதற்கான தெளிவாக்கங்களை பதிவுச் செய்யும் துறையின் முதன்மை ஆய்வாளர் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் மற்றும் பதிவு துறையின் அனைத்து இணை முதன்மை ஆய்வாளர்களுக்கும் வழங்கியுள்ளார். அத்தெளிவாக்கங்கள் பின் வருமாறு:

4 கூற்று: இந்திய முத்திரை சட்டட்தின் சட்டப் பிரிவு 55A வின் கீழ் நிர்ணயிக்க வேண்டிய முத்திரை வரியை குறிப்பிட்டு வந்த கடிதம் தொடர்பான தெளிவாக்கங்கள் கீழே வருமாறு:

1899&ன் இந்திய முத்திரை சட்டத்தின் 55(C) சட்டப்பிரிவு இணை உரிமையாளர்களுக்கு இடையில் உள்ள விடுவிப்பைக் குறித்து கூறுகின்றது. இணை & உரிமைத்துவ உரிமை என்பது தரப்பினர் களினால் உருவாக்கப்படுவதாகும். இந்த உரிமை விற்பனை, அன்பளிப்பு, தீர்வு, பங்கீட்டளித்தல் போன்றவற்றினால், கையகப்படுத்தினாலோ அல்லது எந்த ஒரு தரப்பினர் மற்றொருவரின் சொத்தின் மீது பகுக்கப்படாத பங்கினை பெறுவதினாலோ உருவாக்கப்படுகின்றது. விடுவிப்பவர் மற்றும் ஆகிய இருவருமே உடைமையின் இணை உரிமையாளர் களாக இருக்க வேண்டும். ஒரு இணை உரிமையாளர் இன்னொரு இணை உரிமையாளருக்கு சாதகமாக தனது உரிமையை விட்டுக் கொடுப்பது 1899ன் இந்திய முத்திரைச் சட்டத்தின் 55சி சட்டப்பிரிவின் கீழ் வரும்.

3. 1899&ன் இந்திய முத்திரை சட்டத்தின் 55(A) சட்டப்பிரிவு, கூட்டமைப்பு உடைமைகள், ஒன்றாக இணைந்து சுதந்தரிக்கப்பட்ட உடைமைகள் முறைப்படி மரபுரிமையாக சுதந்தரிக்கப்பட்ட உடை மைகள், பொதுவான விதிகளின் அடிப்படையில் விடுவித்தல், மணவாழ்க்கை உரிமைகளை விடுவித்தல், வாடகை உரிமைகளை விடுவித்தல், பனைய உரிமைகளை விடுவித்தல் மற்றும் 55(B), (C) மற்றும் (D) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வராத விடுவிப்புகள் குறித்து தெரிவிக்கின்றது.

அனைத்து இணை முதன்மை ஆய்வாளர்களும் இத்தெளிவாக்கங்களை பெற்றுக் கொள்வதுடன் மேலும் அனைத்து மாவட்ட பதிவாளர்கள் மற்றும் மாவட்ட இணை பதிவாளர்களிடம் இருந்து அவர் களது ஒப்புதலைப் பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

ஒரு வேலை, ஒரு இணை உரிமையாளருக்கு சாதகமாக ஒரு உரிமை 2000ல்  சட்டத்தின் 55A சட்டப்பிரிவின்படி, விடுவிக்கப்பட்டிருந்தால், பின்பு இணை உரிமைத்துவ உரிமைகளை கையகப் படுத்துவது, அது எந்த வகையான கூற்றாக இருந்தாலும், விற்பனையோ, அன்பளிப்போ, தீர்வின் படியோ அல்லது பங்கீட்டளித்தலின்படியோ அல்லது ஏதேனும் ஒரு தரப்பினர் மற்றொரு இணை உரிமையாளரின் சொத்தில் பகுக்கப் படாத பங்கை பெறும்போதோ அல்லது கூட்டமைப்பு உரிமைகள், இணைந்த மரபுவழி உரிமை, கையகப்படுத்து வதன் மூலம் கிடைக்கும் உரிமைகள், மரபு வழிகள் உட்பட எதுவானாலும், பின் சென்னை, பதிவுச் செய்யும் துறையின் முதன்மை ஆய்வாளர் தெளிவாக்கத்தை இதற்காக வழங்கத் தேவையில்லை. எனவே, முதன்மையாக, சட்டம் 55A விடுவிப்பைக் குறித்து சொல்லும் போது, எந்த உடை மையானாலும், பகுதி 23கி வினால் வழங் கப்படும் விடுவிப்பைத் தவிர) அல்லது (இதே சட்டத்தின் உட்பிரிவுகள் B,C மற்றும் D விடுவிப்பைக் குறிக்காது) ஒரு நபர், மற்றொரு நபர் அல்லது ஏதேனும் குறிப்பிட்ட ஒரு உடைமையின் மீது தனக்குள் கோரும் உரிமையை விட்டுக் கொடுக்கும் போது, பின் சட்டம் 55A கூட்டமைப்பு உரிமை, சேர்ந்து சுதந்தரித்தல், மரபு வழி மூலம் கிடைக்கப்பெறும் உடைமைகள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் இணை & உரிமைத்துவ உரிமையை விடுவிப்பதை மட்டுமே குறிக்கும். விற்பனை, தீர்வை போன்றவை அல்லது ஏதேனும் ஒரு தரப்பினர் மற்றவர் உடைமையின் மீது பகுக்கப்படாத உரிமையைப் பெறும் போது மட்டும் கிடைக்கக் கூடிய மற்றும் விடுவிக்கக்கூடிய இணை உரிமைத்துவ உரிமையின் மீது மட்டுமே 55C பிரிவு பொருந்தும் , 55A சட்டப்பிரிவை மேலும் பரிசீலனை செய்யும் போது, அரசாங்கம், வரியை அதிகபட்சமாக ரூ.10,000/&த்தை சந்தை விலையாகக் கொண்ட உடைமைகளுக்கு ஒரு சதவீதமாகக் குறைப்பதற்கும், மேலும் தீர்வு விடுவிப்பு, பிரிவினை மற்றும் பிரிவினையை தீர்ப்பது போன்றவற்றுக்காகவும், ஒரு உடைமையின் மாற்றம் குடும்பத்திற்குள் ஏற்படும் போதும், அதற்காக சட்டப்பிரிவு 55C யை திருத்தியமைத்து வாக்கியம் மற்றும் கூற்றான, குடும்ப உறுப்பினரல்லாத மற்றொரு இணை & உரிமையாளர் என்பதை சேர்த்து, மேலும் இது போன்ற இணை உரிமையாளருக்கு சாதகமான விடுவிப்பு ஏதேனும் அசையா உடைமையுடன் தொடர்புடையதாக இருந்து, அவ்வுடைமை சென்னை பெருநகர திட்டமிடும் பகுதிக்குள் மற்றும் பெருநகரங்களான மதுரை, கோயமுத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி நகருக்குள் இருந்தால், அது மதிப்பிடப்பட்டு, விடுவிப்புக்குட்பட்ட அவ்வுடைமையின் சந்தை மதிப்பின் மீது ரூ.13/ என வரி நிர்ணயிக்கப்படும்.

01.03.1999 அன்று அரசாங்கக் கடிதமான கடிதம் எண் 4860/யி1ல் வியாபார வரிகள் (யி) வரிச் செயலகம், சென்னை, குடும்பம் என்பது, சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை உள்ளடக்கியது எனக் கூறுகின்றது. எனவே, சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கிடையே ஒரு உடைமை விடுவிக்கப்பட்டால் அவர்களது உறவுமுறைய கருத்தில் கொண்டு முத்திரை வரியில் ஒரு தள்ளுபடி வழங்கப்படுகின்றது. அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் என்பதால் இது வழங்கப்படுகின்றது. சகோதரர்கள் மற்றும் சகோதரி களுக்கு சாதகமாக வழங்கப்படும் உடைமையின் பிரிவினை, தீர்வு மற்றும் விடுவிப்பு ஆகியவை இந¢திய முத்திரை சட்டத்தின் 58&ஆம் சட்டப்பிரிவின் கீழ் ஒரு குடும்பத்தின் உறுப்பினருக்கு சாதகமாக வழங்கப்படுவது என விளக்கப்படுகிறது. 11.10.2000 அன்று, அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் மற்றும் பதிவு செய்யும் துறையின் அனைத்து இணை முதன்மை ஆய்வாளர்களுக்கும், முதன்மை ஆய்வாளர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ள தெளிவாக்கத்தின் மூலம், சட்டப்பிரிவு 55(A) மற்றும் 55(A)1 ன் கீழ் விடுவிப்பு என்பது குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்தால், விதிக்கப்பட வேண்டிய முத்திரை வரி ஒரு ரூபாய் அல்லது அதிகபட்சமாக ரூ.10,000/த்தை சந்தை மதிப்பாகக் கொண்ட உடைமைக்கு ஒவ்வொரு 100 பகுதிக்கும் என செலுத்தப்பட வேண்டும் என்பது நடப்பில் வந்தது.

மேற்கூறியவற்றில் இருந்து, சட்டப்பிரிவு 55கி வும், சென்னை, பதிவு செய்யும் துறையின் முதன்மை ஆய்வாளர் வழங்கிய தெளிவாக்கங்கள் தெளிவாக இரண்டு வேறு முறைகளான இணைந்த முறையில் உடைமையை அனுபவித்தல் மற்றும் மரபுவழியில் உரிமையை பெறுதல் மூலம் கிடைக்கக் கூடிய இணை உரிமைத்துவம் குறித்துத் தெளிவாக பேசு கின்றன. மற்றும் இது   குறிப்பாக, விற்பனை, தீர்வு மற்றும் பங்கீட்டளித்தல் போன்வறற்றின் மூலம் கிடைக்கும் இணை  உரிமைத்துவ உரிமைகளை தவிர்க்கின்றது.

இந்த வழக்கில், உடைமைகளான சுமார் 1126 ச.அடியுள்ள S.NO.2487 வார்டு எண்.2 மற்றும் புதிய வார்டு கி , புதிய பிளாக் 13 பழைய தி.ஷி. எண¢.1135, புதிய நகர மதிப்பீடு எண்.98, திருச்சியில் உள்ள 840 ச.அடி யுள்ள இவ்விரண்டும் மனுதாரரின் தாயாரால் முறையே 1980 மற்றும் 1995 ஆகிய வருடங்களில் வாங்கப்பட்டது மற்றும் அதன் பிறகு அவர் ஒரு உயிலையும் அவரது வாக்குமூலத்தையும் நடை முறைப்படுத்தி 10.6.1995 அன்று இரண்டு விற்பனை ஒப்பந்தங்களின் கீழ் அவரால் வாங்கப்பட்டஇரண்டுஉடைமைகளையும் மனுதாரர் மற்றும் அவரது சகோதரர் நாக ராஜன், ஆகியோர் பெயருக்கு மாற்றி கொடுத்தார். மேலும் மனுதாரரின் தாயார் 18.08. 1995 அன்று காலமானார்.

பின்பு அந்த உயில் நடை முறைக்கு வந்து அவர்களிரு வரும் இணை உரிமையாளர்களானார்கள் என்பது தெரிகின்றது. மனுதாரரின் சகோதரர் தனது பகுக்கப்படாத பாதி உரிமையை மனுதாரருக்கு ரூ.50,000&க்கு விட்டுக் கொடுத்தார். மற்றும் அதனை செயல்படுத்த ஒரு விடுவிப்பு ஒப்பந்தத்தை உருவாக்கினார். அதுவே ஸ்ரீரங்கத்தின் இணை பதிவாளர் முன்பு பதிவு செய்த நாளான 12.11.2002 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. எனவே, மனுதாரரும் அவ ரது சகோதரருமான நாகராஜும் விருப்ப ஆவண முறையில் மரபு வழியாக இணை உரிமைத்துவத்தை பெற்றனர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும் சொல்வதானால், இணை உரிமைத்து வம் ஒரு சுதந்திரத்திற்கான உயிலின் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த மரபுவழி யின் மூலம் உண்டாக்கப்பட்ட இணை உரிமைத்துவ உரிமையை விட்டுக் கொடுப்பது 55A  சட்டப் பிரிவின் கீழ் வருமேயல்லாமல் சட்டத்தின் 55C பிரிவின் கீழ் வராது.

மேற்கூறிய வாதங்களை வைத்துப் பார்க்கும் போது, இந்த நீதிமன்றம், குறைக்கூறப்பட்ட உத்தரவு சென்னை, பதிவு துறையின் முதன்மை ஆய்வாளரால் 10.10.2000 அன்று வழங்கப்பட்ட தெளிவாக்கத்தினோடு தொடர்புடையதல்ல என்று கருதுகின்றது. எனவே, சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதமான, இணை உரிமைத்துவ உரிமை மேற்கூறிய எந்தவொரு வகையில் கையகப்படுத்தப்பட்டோ, உருவாக்கப்பட்டு இருந்தாலோ மேலும் அவர்கள் இருவருக்கும் பொதுவான உரிமையுள்ளவற்றின் மீது விடுவிப்பை ஒரு இணை உரிமையாளர் மற்றவருக்கு சாதகமாக குறிப்பிட்ட உடைமையின் மீது வழங்கினாலோ அதற்கான முத்திரை வரி சுந்தை மதிப்பின் மீது ரூ.13/& என விதிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளாது. மேலும் அவரது வாதமான, 2004&ல் தான் திருத்தியமைக்கப்பட் டது. அமலுக்கு வந்தது. எனவே, 12.11.2002 அன்று பதிவு செய்வதற்காக சமர்ப் பிக்கப்பட்ட ஆவணம், முத் திரை சட்டத்தின் 55C சட்டப்பிரிவின்படி, வரி விதிக்கப்பட அனுமதிக்க வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

மேற்சொன்ன வாதங்களைவைத்துப் பார்க்கையில், குறைகூறப்பட்ட உத்தரவு ஒத்தி வைக்கப்படுகின்றது மற்றும் ஆவண கேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரதிவாதிகள், இரண்டாம் பிரதிவாதி யின் கோப்பில் இருந்து ஆவண எண்.174/02வை வெளியிட வேண்டும் என உத்தரவிடப்படுகின்றது. கட்டணம் ஏதுமில்லை. எனவே, இதனுடன் தொடர்புடைய அனைத்து பிற மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

Lawyers Line October 2012 Edition



 To View Lawyers Line Oct 2012 Editon  



திருநங்கைகள் பாவ ஜென்மங்களா?


இந்தியாவின் சட்ட அமைப்பிற்கான முகவுரை இவ்வாறு சொல்கின்றது. இந்திய மக்களாகிய நாம், நம்மை உத்தமமான, சர்வ சுந்தரமுள்ள, உழைக்கும் ஜனநாயக குடியரசாக நம்மை வளர்த்துக் கொண்டதுடன், அனைத்து குடிமக்களுக்கும் நீதி, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதோடு, கருத்து, எண்ணம், நம்பிக்கை, விசுவாசம் மற்றும் மதவழிப்பாட்டு சுதந்திரத்தையும், அந்தஸ்து மற்றும் வாய்ப்புகளின் சம உரிமையையும் தனி நபரின் மரியாதையை வளப்படுத்தும் சகோதரத்தன்மையையும், மற்றும் தேசத்தின் ஒற்றுமை மற்றும் மரியாதையையும் வழங்க வேண்டும்.

ஆனால், மேலே சொல்லப்பட்ட கருத்துக்களை உண்மையிலேயே நடை முறைப்படுத்த வேண்டிய நிலையிலும், அடிப்படை உரிமைகளை செயல்படுத்த வேண்டிய நிலையிலும், குடிமக்கள் என்னும் பதம், திருநங்கைகளைத் தவிர்த்து, ஆண், பெண் ஆகிய இரு இனத்தவருக்கு என குறுகிவிடுகின்றது. சொல்வதானால் நாம் அவர்களை மனித பிறவிகளாகவே கருத தவறிவிடுகின்றோம்.

நாட்டில் இந்த பிரிவு குடிமக்களால் சந்திக்கப்படும் கஷ்டங்கள், வேறு எந்தவொரு வகுப்பினரையோ அல்லது பிரிவினர்களைவிட அதிகமாகும். இந்த பிரிவு குடிமக்களுக்கு எதிராக மக்கள் தடையற்ற பாகுபாட்டை கடைபிடிக்கின்றனர். இது, இந்த திருநங்கைகளை பிச்சை எடுத்தல், விபச்சாரம் அல்லது சில நேரங்களில் மிரட்டி பணம் பரித்தல் என இவ்வகை நிலைகளைத் தவிர வேறு தொழில் துறைகளில் காண்பது அரிதாகவுள்ள நிலையில் இருந்தே தெளிவாகத்தெரிகின்றது.

அரசியல், சமூகம் அல்லது பொருளாதாரத்தில் சிறிய அளவு பிற்படுத்தப்பட்ட தன்மையை காண்பிக்கும் மற்ற பிரிவினருக்கு, நாம் ஒரு வகையான ஒத்துழைப்பின் செயல்பாட்டின் கோட்பாட்டை அவர்களது உயர்வுக்காக வைத்திருக்கின்றோம். அது சில சட்டங்களை குறிப்பிட்ட வகுப்பினர், பழங்குடி இனத்தவர்களுக்கென ஒதுக்கீடு செய்வதாகட்டும் அல்லது பாராளுமன்றத்திலோ,  சட்டமன்றத்திலோ அவர்களுக்கு பதவி ஒதுக்கீடு செய்வதில் இருந்து, பொது வேலை வாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் அனுமதி வரை பல காரியங்களை செய்கிறோம். ஆனால் இவ்வகை குடிமக்களுக்காக எதுவுமே கிடையாது.

இதன் மிகத் தெளிவான காரணம் என்னவெனில், நாம் அவர்களை இந்நாட்டின் குடிமக்களாக அல்ல, முதலில் அவர்களை மனிதர்களாகக் கூட நடத்துவதில்லை. நாம் அவர்களை வெறுத்து, தனிமைப்படுத்தி அவர்களிடம் ஒரு முரட்டுத்தனமான நடத்தையை கையாள்கிறோம். இது அவர்களை அவர்களுடைய பாதுகாப்பிற்காக, குழுக்களாக நடமாடுவதை கட்டாயமாக்குகின்றது.

மேலும் நமது சட்டமைப்பு, மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் என இவற்றின் எந்த அடிப்படையிலும் வேறுபாடு பார்ப்பதை தவிர்க்கின்றது. ஆனால், இதற்கு நேர்மாறாக, பெரும்பாலான அரசு உத்தியோகங்கள் அல்லது பல்கலைக் கழகங்களின் விண்ணப்பப் படிவங்களில் பாலினம் என்னும் தலைப்பின் கீழ் மூன்றாவது தேர்வு கிடையாது. இவை அனைத்துமே திருநங்கைகளின் உரிமைகளையும் அவர்களது வாழ்வாதாரத்தை மறுக்கக் கூடிய செயல்களின் பிரதிபலிப்பாகும்.

இதனால், அவர்கள் நமது பார்வையில் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். அல்லது இத்தனை வசதிகள் அனைத்திற்குமான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதை தெளிவாக இவை காண்பிக்கின்றன. மேலும் அவர்கள் சுய முன்னேற்றத்துக்கும் அல்லது அவர்களின் வாழ்வு மேலும் வளர்ச்சியடையவும் அனைத்து வாய்ப்புகளும் மறுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நடப்பதற்கு  காரணம் அவர்கள் மேல் எந்த தவறும்  இருப்பதினால் அல்ல ஆனால், அவர்கள் வித்தியாசமான இயற்கை அம்சங்களுடன் பிறந்திருப்பதே காரணாகும். இந்நிலையில், செயற்கைத்தனம் என எதுவுமில்லை. இந்நிலை, இந்து புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. மிக முக்கிய கடவுளான சிவன், அர்த்தநாரீஸ்வராக (பாதி ஆண், பாதி பெண்) சித்தரிக்கப்படுகின்றார்.
இந்திய பாராளுமன்றம், நாட்டில் சட்டங்களை அமைப்பதில் உச்சகட்ட அமைப்பாகும். இது எப்போதெல்லாம் சமுதாயத்தில் பல பிரிவுகளின் உரிமைகளோ அல்லது அவர்களது நிம்மதியான வாழ்வுரிமையோ மீறப்படும் போது, அவ்வுரிமைகளை பாதுகாக்க சட்டங்களை அமைக்கின்றது. ஆனால், பழங்காலம் முதற்கொண்டே அவர்கள் இருந்து வந்தாலும் மேலும் அவர்கள் இருப்பது இந்திய புராணங்களிலும், மத புனித நூல்களிலும் சொல்லப்பட்டிருந்தாலும், திருநங்கைகளின் உரிமைகளுக்காகவும் அல்லது அவர்களை வன்முறையில் இருந்து பாதுகாக்கவும் எந்த சட்டமும் இந்தியாவில் இதுவரை இல்லை.

இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர்களை அவர்களது சாதிப் பெயரைக் கொண்டு அழைப்பது குற்றமாகும். மற்றும் அவ்வாறு செய்பவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையை அளிக்க வேண்டுமென சட்டங்கள் பரிந்துரைக்கின்றன. ஆனால், திருநங்கைகளைப் பொறுத்தவரையில் நமது சட்டத்தை இயற்றுவோர் வேறுபாட்டை காண்பிக்கின்றனர்.

மக்கள் அவர்களைப் பல இழிவுபடுத்தும் பெயர்களைக் கொண்டு அழைக்கின்றனர். ஆனால், இவ்வித கொடுமைகளுக்கு எதிராக அவர்களால் புகாரளிக்க இயலாது. ஏனெனில் இக்குற்றத்தை காவல்துறையினர் தாங்களே செய்கின்றனர்.

வன்கொடுமைகளைத் தவிர்க்கும் சட்டத்துடன் வேறு பல சட்டங்களும் அவர்களது சார்பாக உள்ளது. ஏனெனில் அவர்கள் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு உட்பட்டவர்களாவர்.

ஆனால், திருநங்கைகளின் நிலையை பார்க்கும் போது, சமுதாயத்தில் அவர்களைப் போன்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் வேறு யாருமில்லை என்பதில் யாருக்கும் சந்தேகமே இருக்காது. வேறு எந்த ஒரு பிரிவினரும் அவர்களது பாலினம் தெரிந்தவுடனேயே குடும்பத்தைவிட்டு வெளியேற கட்டாயப்படுத்துவதில்லை. மேலும் வேறு எந்த பாலினத்தவரும் இவர்களைப் போல இவ்வளவு வெறுப்புடன் சமுதாயத்தால் ஒதுக்கப்படுவதில்லை.
நாம் அவர்களை பள்ளிகளில், அலுவலகங்களில், பாராளுமன்றத்தில் அல்லது வேறு முக்கிய இடங்களில் அல்லது வேறு முக்கியமான வளர்ச்சி பணிகள் நடைபெறும் இடங்களில் பார்க்க முடியாது. இதனால் அவர்களால் தேவையான அளவு பணம் ஈட்டவோ அல்லது மரியாதையுள்ள வாழ்க்கைத் தரத்தை வாழவோ மற்றும் நாட்டுக்கு தங்களது பங்களிப்பை வழங்கவோ முடிவதில்லை.

பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் 21&ம் சட்டப்பிரிவின் கீழ் வரும் வாழ்வதற்கான உரிமை என்பது சாதாரண மிருகத்தனமான வாழ்க்கையை குறிப்பதில்லை. ஆனால், ஒரு அர்த்தமுள்ள மற்றும் மதிப்புள்ள வாழ்வையே குறிக்கின்றது என்பதையும் தெரிவிக்கின்றது. இப்பிரிவினர் சமுதாயத்தில் மட்டும் பிற்படுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கின்றனர். இதில் நாம் மிகவும் அதிகமாக கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், திருநங்கைகள் அரசியலிலும் குறைவாகவே பிரதிபலிக்கப்படுகின்றனர். அவர்கள் பாராளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ அல்லது உள்ளூர் அரசியல் அமைப்புகளில் கூட காணப்படுவதில்லை. மற்ற பிரிவினருக்கான உள்ளதைப் போல எந்தவொரு தேசிய அமைப்பும் இவர்கள் நலனுக்கென்று இருப்பதில்லை.

அவர்கள் செயலற்றவர்கள் போல நடத்தப்படுகின்றார்கள். நாம் அவர்களை மனிதர்களாக நடத்த மறுக்கின்றோம். ஒரு தேசத்தின் பெருந்தன்மை அது அதனுள் இருக்கும் மிகவும் பலவீனமானவர்களை எவ்வாறு நடத்துகின்றது என்பதை வைத்தே அளவிடப்படுகின்றது.

இனிமேலாவது நாம் அவர்களை மற்ற சமுதாயத்தினரோடு இணைப்பதில் முனைப்புடன் செயல்பட ஆரம்பிக்க வேண்டும். அதனை வழக்கமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அவர்களுக்கு அனுமதி வழங்குவதில் இருந்துத் தொடங்க வேண்டும். இதனால் சாதாரணமாக வளர்ந்து முறையான கல்வி பெற்ற மற்றவர்களுடன் அவர்கள் இணைந்து உளவுவார்கள். இதனால் அவர்களும் முறையான கல்வி பெற்று தேசிய வருமானத்திற்கு பங்களிப்பதுடன், மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கையை மேற்கொள்வார்கள்.

மேலும் சாதாரண மக்களைப் போல அவர்களுக்கும் நாம் சம உரிமை வழங்கினால்தான் நாம் சட்டமைப்பின் பற்றுதலோடு உண்மையான சுதந்திர ஜனநாயகமாவோம்.

Thursday 25 October 2012



ஏன் வழக்குரைஞராகக்கூடாது?

சட்டம் தான் கலைகளில் மிகப் பழமைஏன்வழக்குரைஞராகக்கூடாது? சட்டம் தான் கலைகளில் மிகப் பழமையானது, ஆனால், தொழில் முறைகளில் மிகவும் புதுமையானதுருரு அமெரிக்கா வின் புகழ் பெற்ற வழக்கறிஞரும் கல்வியாளருமான டெரிக் போக் ஒருமுறை இவ்வாறு சொன்னார். அவரது வார்த்தைகள் சரியாக இன்றைய இந்தியாவின் சட்டக் கல்வி அமைப்பிற்கு பொருந்து கின்றது. இந்தியா 1990&களின் தொடக்கத்தில் புதிய தாராள பொருளாதார கோட்பாடுகளுக்கு தனது கதவுகளை திறந்ததுடன், மிகப் பெரிய வேலைச் சந்தையான தகவல் தொழில் நுட்பத்திற்கும் தனது கதவுகளைத் திறந்தது. அது பத்தாண்டுகளின் பிற்பாதியில் தகவல் தொழில்நுட்ப பொருளா தார சந்தை என்று அழைக்கப்பட் டது. அது இன்று வரை தொடர் கிறது.ஆனால், இந்த மில்லெனியத் தின் தொடக்கத்தில் இருந்ததைப் போல ஐ.டி. என்பது இப்போது மிகவும் பேசப்படும் வார்த்தையல்ல. பெரும் சதவீதமான மாணவர்கள் பொறியியல், மருத்துவ படிப்பு களை தவிர்த்து, சட்டம் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த படிப்பு களுக்கு மாரியுள்ளனர்.நீறீணீt என பொதுவாக அறியப்படும்.

பொது சட்ட நுழைவுத் தேர்வை எடுத்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, இப்போது மாறி வரும் முறைக்கு சிறந்த உதாரணமாகும். 2011&ல் 23,500&க் கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தனர். இது நாட்டின் 12 தேசிய சட்ட பல்கலைக் கழகங்களில் நுழைய பொதுவானத் தேர்வாகும். இது 2010ல் CLAT தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கைய விட 6000 அதிக மாகும். இது சுமார் 30,000 தாண்டும் என இவ்வருடம் எதிர்பார்க்கப் படுகின்றது.இந்திய சட்ட நிறுவனங்கள் பலவும் புதிய சட்ட பட்டதாரிகளை அவர்களது நிறுவனங்களுக்குள் அழைத்து, அவர்களுக்கு அதிக அளவு வாய்ப்புகளை உண்டாக் குகின்றனர். இந்திய சட்ட சந்தை உலகின் அதி வேகமாக உளவும் சந்தைகளில் ஒன்றாகும். மற்றும் வேறு எப்போதும், இல்லாத வகையில் இந்திய நிறுவனங்கள் எல்லை தாண்டிய பிரிமாற்றங்களை அதிகமாகச் செய்கின்றன. நிதித் துறையின் கடினங்கள், அறிவுசார் உடைமைகளின் மாற்றத்தில் உள்ள சவால்கள் மற்றும் பிற சிக்கலான உள்ளூர் சட்ட நிகழ்வுகள் ஆகிய அனைத்தும் பல துறை களில் நிபுணரான இவ்வகை சட்ட நிறுவனங்களால் கையாளப்படு கின்றன. இவை வரி விதித்தல் முதல் ஒன்றாக இணைத்தல் வரை, அறிவுசார் உடைமைகளின் உரிமை முதல் சந்தைகள் வரை, வான்வழிப் பயணம் மற்றும் அனைத்தையும் கவனிக்கின்றன.இப்பாடத்தை பயில தேடுபவர் களின் எண்ணிக்கையின் தேவை பெரும்பாலும் ழிலிஹி &க்கள் அல்லது தேசிய சட்டப் பல்கலைக் கழகங்கள் சந்திக்கின்றன. இவை 5 வருட ஒருங்கிணைந்த சட்டபடிப்பை வழங்குகின்றன.

எனினும், இதில் விசேஷித்த அம்சம் என்னவெனில், இந்த ழிலிஹி &க்கள் சட்டத் தொழில், சட்டத்தை பயிற்றுவித்தல் மற்றும்ஆராய்ச்சி மற்றும் சட்டத் தீர்வை போன்றவற்றின் தேவை களுக்கென்றே இவை அமைக்கப் பட்டுள்ளன. எனவே, இதில் பயிலும் மாணவர்களும் நாளடைவில் சட்ட வழக்கறிஞர்களாகவும், சட்ட ஆசிரியர்களாகவும் அல்லது சட்ட ஆராய்ச்சியில் ஈடுபடவும் அல்லது நீதி தீர்வையில் ஈடுபட வேண்டும் என எதிர்பார்க்கப்படு கின்றார்கள்.ஜுண்டால் உலக சட்டப் பள்ளி யின் (லிலிஙி & லிலிவி) நிகழ்வுகளின் இயக்குநரான ஆனந்த பிரகாஷ் மிஷ்ராவின் கூற்றுப்படி, சட்டம் பயில வேண்டும் என்றும் ஆர்வத்தை, தூண்டுபவை, யுயுசம்பளங்களும், வேலை சூழ் நிலைகளும் தான். மிகவும் உயர்ந்த தரமான சட்டக் கல்லூரிகளின் மாணவர்களுக்கு சட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்டாலும் அவை ஐ.ஐ.டியின் படிதாரிகளுக்கு வழங்கப்படும் பணி வாய்ப்பு களைப் போல் உள்ளன. மேலும் தொழில் முறையாக சட்டம் உங்களுக்கு நீதிமன்றத்தில் விவாதிக்கும் வாய்ப்பையும் அதன் மூலம் இத்துறையில் உங்களுக்கென்று ஒரு இடத்தை உருவாக்கும் வாய்ப்பையும் தருகின்றது. 5 வருட சட்ட படிப்பு, அதன் பாடத்திட் டத்தில், பொருளாதாரம், அரசியல், சமுதாயம், தொடர்பு, நிர்வாகம் மற்றும் சில சமயங்களில் தொழில்நுட்பம் ஆகியவற்றைத் தருவதால், படிப்பை முடித்து வெளியேறும் போது பல வேறுபட்ட தொழில் வாய்ப்புகள் உள்ளன. சட்டம் என்பது சுதந்திரமான ஒரு தொழில் முறையாகும். அது உங்களை 9 to 5 என்னும் வேலையைப் போல காலத்தால் கட்டுப்படுத்தாதுருரு என்று ஆனந்த் கூறுகின்றார். இவர் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற சட்ட தேர்வு பயிற்சியாளர்களில் ஒருவராவார்.

டெல்லியின், தேசிய சட்ட பல்கலைக் கழகத்தின் துணைத் தலைவரான பேராசிரியர், ரன்பீர் சிங் கூறுகையில், சட்டத்தை படிக்க வேண்டிய வாய்ப்பு தேர்வு தானே தவிர, அது ஓர் சந்தர்ப்பம் அல்ல. இது ஒரு கூற்றின் காரணத்தினால் அல்ல பல கூறுகளின் காரணங்களால் ஆனது. சட்ட வல்லுநர்களின் அமைப்பு ஒன்றாக இணைந்த நோக்கமுடைய சட்ட பல்கலைக் கழகங்களை உருவாக்க முயற்சித்ததன் பலனாகும். சட்ட பல்கலைக்கழகங்கள் பல புதிய தொழில்முறை வாய்ப்புகளை வழங்குகின்றன. இது இளைய தலைமுறையினரை சமூகக் காரணங்களை கையாள உந்துவதுடன், வளரும் உலகமயமாக்கப்பட்ட உலகத்தில் உள்ள வாய்ப்புகளையும் வழங்குகின்றதுருரு, என்கிறார். டெல்லியில் உள்ள மிக உயரிய சட்டப் பள்ளியான தேசிய சட்டப் பல்கலைக் கழகம், தனது சொந்த நுழைவு தேர்வினை நடத்துகின்றது. துணைத் தலைவரின் முக்கியத்துவம் என்னவெனில், தொழில்நுட்பத்தில் அறிவுள்ள, தொழில்முறையில் போட்டியிடக் கூடிய மற்றும் சமூகத்திற்கு ஏற்ற வழக்கறிஞர்களை உருவாக்குவதே.லண்டன் பொருளாதார பள்ளியில் சமூகக் கோட்பாட்டில் முதுகலைப் பட்டதாரி மாணவரான சுபாங்கர் நாயகிற்கு, யுயு சட்டம் என்பதன் மூலம், தேசத்தின் சட்டம் மற்றும் அரசியலை சுலபமாக அறிந்துக் கொண்டு அரசியல் துறையில் நுழைய உபயோகமாய் இருக்கும்ருரு என்றுக் கூறுகின்றார்.

நமது பாராளுமன்றத்தின் கீழ் சபையில் 75க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. சுபாங்கர், டெல்லி பல்கலைக் கழகத்தின் மிகவும் புகழ் பெற்ற கேம்ப்ஸ் லா சென்டரில், ஃபாகல்டி ஆஃப் லாருரு வின் மீது நோக்கமாய் இருக்கிறார். (இது பட்டமளிப்பிற்கு பின்பு 3 வருட லிலிஙி அளிக்கின்றது) அதன் பின் சட்ட படிப்பை பெற்று அரசியல் வாழ்க்கையில் நுழைவதே அவர் நோக்க மாகும்.ஒவ்வொரு வருடமும் சட்ட பட்ட தாரிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும் தேசிய சட்ட பல்கலைக் கழகங்கள் புதிதாக தொடங்கப்பட்டு தற்போது 15 மாநிலங்களில் உள்ளன. இந்நிலை நீடித்தால், சட்டமே இந்நாளின் வழி என்று சொல்வதே மிகவும் பொருத்தமானதாகும்.யானது, ஆனால், தொழில் முறைகளில் மிகவும் புதுமையானதுருரு அமெரிக்கா வின் புகழ் பெற்ற வழக்கறிஞரும்கல்வியாளருமான டெரிக் போக் ஒருமுறை இவ்வாறு சொன்னார். அவரது வார்த்தைகள் சரியாக இன்றைய இந்தியாவின் சட்டக் கல்வி அமைப்பிற்கு பொருந்து கின்றது. இந்தியா 199&களின் தொடக்கத்தில் புதிய தாராள பொருளாதார கோட்பாடுகளுக்கு தனது கதவுகளை திறந்ததுடன், மிகப் பெரிய வேலைச் சந்தையான தகவல் தொழில் நுட்பத்திற்கும் தனது கதவுகளைத் திறந்தது. அது பத்தாண்டுகளின் பிற்பாதியில் தகவல் தொழில்நுட்ப பொருளா தார சந்தை என்று அழைக்கப்பட் டது. அது இன்று வரை தொடர் கிறது.ஆனால், இந்த மில்லெனியத் தின் தொடக்கத்தில் இருந்ததைப் போல ஐ.டி. என்பது இப்போது மிகவும் பேசப்படும் வார்த்தையல்ல. பெரும் சதவீதமான மாணவர்கள் பொறியியல், மருத்துவ படிப்பு களை தவிர்த்து, சட்டம் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த படிப்பு களுக்கு மாரியுள்ளனர்.

CLAT என பொதுவாக அறியப் படும். பொது சட்ட நுழைவுத் தேர்வை எடுத்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, இப்போது மாறி வரும் முறைக்கு சிறந்த உதாரணமாகும். 2011&ல் 23,500&க் கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வுக்காக விண்ணப்பித் திருந்தனர். இது நாட்டின் 12 தேசிய சட்ட பல்கலைக் கழகங்களில் நுழைய பொதுவானத் தேர்வாகும். இது 2010&ல் CLAT தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கைய விட 6000 அதிக மாகும். இது சுமார் 30,000 தாண்டும் என இவ்வருடம் எதிர்பார்க்கப் படுகின்றது.இந்திய சட்ட நிறுவனங்கள் பலவும் புதிய சட்ட பட்டதாரிகளை அவர்களது நிறுவனங்களுக்குள் அழைத்து, அவர்களுக்கு அதிக அளவு வாய்ப்புகளை உண்டாக் குகின்றனர். இந்திய சட்ட சந்தை உலகின் அதி வேகமாக உளவும் சந்தைகளில் ஒன்றாகும். மற்றும் வேறு எப்போதும், இல்லாத வகையில் இந்திய நிறுவனங்கள் எல்லை தாண்டிய பரிமாற்றங்களை அதிகமாகச் செய்கின்றன. நிதித் துறையின் கடினங்கள், அறிவுசார் உடைமைகளின் மாற்றத்தில் உள்ள சவால்கள் மற்றும் பிற சிக்கலான உள்ளூர் சட்ட நிகழ்வுகள் ஆகிய அனைத்தும் பல துறை களில் நிபுணரான இவ்வகை சட்ட நிறுவனங்களால் கையாளப்படு கின்றன. இவை வரி விதித்தல் முதல் ஒன்றாக இணைத்தல் வரை, அறிவுசார் உடைமைகளின் உரிமை முதல் சந்தைகள் வரை, வான்வழிப் பயணம் மற்றும் அனைத்தையும் கவனிக்கின்றன.

இப்பாடத்தை பயில தேடுபவர் களின் எண்ணிக்கையின் தேவை பெரும்பாலும் NLUக்கள் அல்லது தேசிய சட்டப் பல்கலைக் கழகங்கள் சந்திக்கின்றன. இவை 5 வருட ஒருங்கிணைந்த சட்டபடிப்பை வழங்குகின்றன. எனினும், இதில் விசேஷித்த அம்சம் என்னவெனில், இந்த ழிலிஹி &க்கள் சட்டத் தொழில், சட்டத்தை பயிற்றுவித்தல் மற்றும்ஆராய்ச்சி மற்றும் சட்டத் தீர்வை போன்றவற்றின் தேவை களுக்கென்றே இவை அமைக்கப் பட்டுள்ளன. எனவே, இதில் பயிலும் மாணவர்களும் நாளடைவில் சட்ட வழக்கறிஞர்களாகவும், சட்ட ஆசிரியர்களாகவும் அல்லது சட்ட ஆராய்ச்சியில் ஈடுபடவும் அல்லது நீதி தீர்வையில் ஈடுபட வேண்டும் என எதிர்பார்க்கப்படு கின்றார்கள்.ஜுண்டால் உலக சட்டப் பள்ளி யின் (லிலிஙி & லிலிவி) நிகழ்வுகளின் இயக்குநரான ஆனந்த பிரகாஷ் மிஷ்ராவின் கூற்றுப்படி, சட்டம் பயில வேண்டும் என்றும் ஆர்வத்தை, தூண்டுபவை, யுயுசம்பளங்களும், வேலை சூழ் நிலைகளும் தான்.

மிகவும் உயர்ந்த தரமான சட்டக் கல்லூரிகளின் மாணவர்களுக்கு சட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்டாலும் அவை ஐ.ஐ.டியின் படிதாரிகளுக்கு வழங்கப்படும் பணி வாய்ப்பு களைப் போல் உள்ளன. மேலும் தொழில் முறையாக சட்டம் உங்களுக்கு நீதிமன்றத்தில் விவாதிக்கும் வாய்ப்பையும் அதன் மூலம் இத்துறையில் உங்களுக்கென்று ஒரு இடத்தை உருவாக்கும் வாய்ப்பையும் தருகின்றது. 5 வருட சட்ட படிப்பு, அதன் பாடத்திட் டத்தில், பொருளாதாரம், அரசியல், சமுதாயம், தொடர்பு, நிர்வாகம் மற்றும் சில சமயங்களில் தொழில்நுட்பம் ஆகியவற்றைத் தருவதால், படிப்பை முடித்து வெளியேறும் போது பல வேறுபட்ட தொழில் வாய்ப்புகள் உள்ளன. சட்டம் என்பது சுதந்திரமான ஒரு தொழில் முறையாகும். அது உங்களை 9 to 5 என்னும் வேலையைப் போல காலத்தால் கட்டுப்படுத்தாதுருரு என்று ஆனந்த் கூறுகின்றார். இவர் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற சட்ட தேர்வு பயிற்சியாளர்களில் ஒருவராவார்.டெல்லியின், தேசிய சட்ட பல்கலைக் கழகத்தின் துணைத் தலைவரான பேராசிரியர், ரன்பீர் சிங் கூறுகையில், சட்டத்தை படிக்க வேண்டிய வாய்ப்பு தேர்வு தானே தவிர, அது ஓர் சந்தர்ப்பம் அல்ல.

இது ஒரு கூற்றின் காரணத்தினால் அல்ல பல கூறுகளின் காரணங்களால் ஆனது. சட்ட வல்லுநர்களின் அமைப்பு ஒன்றாக இணைந்த நோக்கமுடைய சட்ட பல்கலைக் கழகங்களை உருவாக்க முயற்சித்ததன் பலனாகும். சட்ட பல்கலைக்கழகங்கள் பல புதிய தொழில்முறை வாய்ப்புகளை வழங்குகின்றன. இது இளைய தலைமுறையினரை சமூகக் காரணங்களை கையாள உந்துவதுடன், வளரும் உலகமயமாக்கப்பட்ட உலகத்தில் உள்ள வாய்ப்புகளையும் வழங்குகின்றதுருரு, என்கிறார். டெல்லியில் உள்ள மிக உயரிய சட்டப் பள்ளியான தேசிய சட்டப் பல்கலைக் கழகம், தனது சொந்த நுழைவு தேர்வினை நடத்துகின்றது. துணைத் தலைவரின் முக்கியத்துவம் என்னவெனில், தொழில்நுட்பத்தில் அறிவுள்ள, தொழில்முறையில் போட்டியிடக் கூடிய மற்றும் சமூகத்திற்கு ஏற்ற வழக்கறிஞர்களை உருவாக்குவதே.லண்டன் பொருளாதார பள்ளியில் சமூகக் கோட்பாட்டில் முதுகலைப் பட்டதாரி மாணவரான சுபாங்கர் நாயகிற்கு, சட்டம் என்பதன் மூலம், தேசத்தின் சட்டம் மற்றும் அரசியலை சுலபமாக அறிந்துக் கொண்டு அரசியல் துறையில் நுழைய உபயோகமாய் இருக்கும்ருரு என்றுக் கூறுகின்றார். நமது பாராளுமன்றத்தின் கீழ் சபையில் 75க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. சுபாங்கர், டெல்லி பல்கலைக் கழகத்தின் மிகவும் புகழ் பெற்ற கேம்ப்ஸ் லா சென்டரில், ஃபாகல்டி ஆஃப் லாருரு வின் மீது நோக்கமாய் இருக்கிறார். (இது பட்டமளிப்பிற்கு பின்பு 3 வருட லிலிஙி அளிக்கின்றது) அதன் பின் சட்ட படிப்பை பெற்று அரசியல் வாழ்க்கையில் நுழைவதே அவர் நோக்க மாகும்.

ஒவ்வொரு வருடமும் சட்ட பட்ட தாரிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும் தேசிய சட்ட பல்கலைக் கழகங்கள் புதிதாக தொடங்கப்பட்டு தற்போது 15 மாநிலங்களில் உள்ளன. இந்நிலை நீடித்தால், சட்டமே இந்நாளின் வழி என்று சொல்வதே மிகவும் பொருத்தமானதாகும்.